சத்யாவை காப்பாற்ற கத்தி குத்தை வாங்கிய கார்த்திக் கிருஷ்ணா.! மௌனராகம் 2 இன்றைய முழு எபிசோட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனையும் அறிமுகப்படுத்தி தற்போது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல் தான் மௌன ராகம் 2.

அந்த சீரியலில் சின்ன குழந்தைகளாக இருந்து வந்த ஸ்ருதி மற்றும் சத்யா இருவரும் தற்பொழுது வளர்ந்து ஒரே வீட்டில் மருமகள்களாக வாழ்ந்து வருகின்றனர். சுருதி எப்படியாவது சத்யாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என முடிவில் பல திட்டங்களை போட்டு வந்தார்.

அந்த வகையில் சத்யா உன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தனது அம்மா மல்லிகா மற்றும் அவருடைய மாமா ஆகியோர்களுடன் வாழ்ந்து வந்தார். சத்யாவை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து சென்று விட வேண்டும் என வருண் பல முயற்சிகளை செய்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலைகள் வருணின் அத்தை சத்யா மற்றும் மளிகை ஆகியோர்களை பார்த்து சத்யாவுக்கு என்ன தெரியும் பாடம் மட்டும் தான் தெரியும் என கூறியதால் சத்யாவின் மாமா வருணிடம் நீ ஒரு பாட்டு முழுவதுமாக பாடி வீட்டு சத்யாவை அழைத்து செல் என்று கூறுகிறார்.

அதற்காக முயற்சி செய்தும் முடியத நிலையில் சென்னைக்கு வருண் கிளம்ப கார்த்திக் கிருஷ்ணன் வந்து உதவுகிறார் பிறகு வருணிக்கு பாட்டு பாட வந்துவிடுகிறது. அந்த வகையில் சத்தியா மற்றும் வருண் இருவரும் ஒரே மேடையில் பாட்டு பாட அனைவரும் வருணை பாராட்டுகிறார்கள்.

பிறகு வருண் நான் ஜெயித்துவிட்டேனா நீ இனிமேல் என்னுடன் சென்னைக்கு வந்து விடுவியா என சத்யாவிடம் கூற சத்யா மேடையில் வருணை கட்டி பிடிக்கிறார். பிறகு வெளியில் வர காதம்பரி மற்றும் அவருடைய அம்மா ரவுடிகளிடம் போன் செய்து அங்கு இருக்கும் அனைவர்களையும் கொலை செய்யுமாறு கூறுகிறார்.

பிறகு சுருதி ரவுடிகளிடம் கண்ணை காட்ட அவர்கள் சத்யாவை குத்துவதற்காக செல்கிறார்கள் அதனை பார்த்த கார்த்திக் கிருஷ்ணா அந்த கத்திக்குத்தை வாங்குகிறார் இதனைப் பார்த்து சத்யா கத்த அனைவரும் வந்து வருணை தூக்குகிறார்கள்.இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment