பாரதி கண்ணம்மா சீரியல் போல் மாறிய அடுத்த விஜய் டிவி சீரியல்.! வச்சி செய்யப்போகும் நெட்டிசன்கள்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற மௌனராகம் சீரியல் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது முதல் சீசனில் இருந்த சுருதி மற்றும் சக்தி இருவரும் வளர்ந்து ஒரே வீட்டில் மருமகள்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த சக்தி தான் இந்த சத்யா என்பதைத் தெரிந்துகொண்ட சுருதி தன்னால் முடிந்த பல திட்டங்களை தீட்டி சந்தியாவை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறாள்.அந்தவகையில் சமீபத்தில் வில்லி ஸ்ருதி வருணிடம் உங்கள் திருமணத்திற்கு முன்பு சத்யாவும் தருணும் காதலித்தார்கள் எனவே தற்பொழுது சத்யாவிற்காக என்னிடம் தருண் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறி அழுகிறாள்.

இதனால் கோபமடைந்து வருண் சத்யாவிடம் சண்டை போட்ட வருகிறான். இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று தம்பியை காதலித்துவிட்டு அண்ணனை திருமணம் செய்து கொள்ள எப்படி மனசு வந்தது என கேட்கிறான். பிறகு இதற்கு மேல் இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன் என் மீது தப்பு இல்லை என்று எத்தனை தடவை கூறுவது என சொல்லிவிட்டு பை ஒன்றை எடுத்து விட்டு கிளம்பி விட்டாள் சத்யா.

பிறகு சத்யா ரோட்டில் பையை தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருக்கும் காட்சியை பார்த்த ரசிகர்கள் அடுத்தது பாரதிகண்ணம்மா தொடரை போல மௌனராகம் சீரியலை வச்சி செய்யலாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment