வருண் அம்மாவை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் ஸ்ருதி.! அதிர்ச்சியாகும் ருக்குமணி வைரலாகும் மௌன ராகம் இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் மௌன ராகம் இந்த சீரியலில் தற்பொழுது வருணனின் தாயார் கஸ்தூரி உயிரோடு இருக்கும் செய்தி சுருதியின் பாட்டி ருக்குமணிக்கு தெரிய வருகிறது எனவே ருக்குமணி தன்னுடைய பேத்தி ஸ்ருதியிடம் இதனைப் பற்றி கூறுகிறார்.

எனவே தற்பொழுது சுருதி தனது மாமியார் கஸ்தூரியை மீட்டு தனது வீட்டில் கொடுத்து சேர்ப்பதற்காக அவரை கடத்தி வைத்திருக்கும் வீட்டிற்கு வருகிறார். இந்நிலையில் தொழிலதிபரான மனோகர் தன்னுடைய இரு மகன்கள் வருண் மற்றும் தருண் ஆகியோர்களுடன் வாழ்ந்து வருகிறார் மேலும் இவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் மனோகரின் தங்கையும் இருந்து வருகிறார். வருண், தருண் இவர்களுடைய மனைவிகளாக அக்கா தங்கையான சக்தி, சுருதி இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சக்தி அனைத்து விஷயங்களிலும் சரியாக இருப்பதால் மூத்த மருமகள் என்ற உரிமையில் அவருக்கு தான் அனைத்து முன்னுரிமைகளும் தரப்படுகிறது. இதனால் சுருதிக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை என்பதற்காக பல சதி திட்டங்கள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனை பற்றி சுருதி காதம்பரி மற்றும் தன்னுடைய தாத்தா விஸ்வநாதன் பாட்டி ருக்குமணி ஆகியோர்களுடன் கூறி பல விஷயங்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் வருணை கொலை செய்ய திட்டமிட்டது, சக்தியை கொலை செய்ய ஆள் அனுப்பியது, சக்தியின் தாயார் மல்லிகாவை கொலை செய்ய திட்டமிட்டது என அனைத்து தீய செயல்களையும் சுருதி செய்த நிலையில் ஒன்று கூட திட்டமிட்டபடி நடக்கவில்லை மேலும் சிறிது தான் இந்த அனைத்தையும் செய்தது என மனோகரின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது எனவே அனைவரும் இவரை வருத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மனோகரின் மனைவியும் வருண் மற்றும் தருணின் தாயுமான கஸ்தூரி தீ விபத்தில் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்ற செய்தி காதம்பரி குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது எனவே கதாமரியின் தாய் ருக்குமணி இந்த தகவலை ஸ்ருதியிடம் கூறுகிறார் எனவே ஸ்ருதி தன்னுடைய பாட்டியுடன் இணைந்து கஸ்தூரியை கடத்தி வைத்திருக்கிறார்.

மேலும் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சுருதி எனக்கு மனோகர் வீட்டில் மரியாதையே இல்லை இப்பொழுது கஸ்தூரி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டால் தனக்கு மரியாதை கிடைத்துவிடும் என்று சொல்லி அவரை உடனடியாக மனோகரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார்.

Leave a Comment