இரவு நேரத்தில் ரவுடிகளிடம் மாட்டிக்கோண்ட சத்யா.! இன்றைய எபிசோட்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முதல் சீசன் அமோக வெற்றியைப் பெற்ற நிலையில் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல்தான் மௌன ராகம் 2.  இந்த சீரியல் அறிமுகமான சில காலகட்டத்திலேயே டிஆர்பி-யில் முன்னணி வகிக்க தொடங்கிவிட்டது.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் தற்பொழுது இளைஞர்கள் மனதை கவரும் வகையில் கதை இருப்பதோடு மட்டுமல்லாமல் சில நடிகர் நடிகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் கார்த்திக், மல்லிகா மற்றும் காதம்பரி என் அம்மா இந்த மூன்று கேரக்டர்களும் தான் முதல் சீசனில் இருந்தவர்களை இரண்டாவது சீசனிலும் வைத்துள்ளார்கள்.

பிறகு இளம் நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது முதல் சீசனில் குழந்தைகளாக இருந்த ஸ்ருதி மற்றும் சக்தி இருவரும் தற்பொழுது வளர்ந்து ஒரே வீட்டில் மருமகளாக வாழ்ந்து வருகிறார்கள்.  சக்தி தான் சத்தியா என்பதை தெரிந்துகொண்ட சுருதி அவளை எப்படியாவது வீட்டை விட்டு வெளியில் அனுப்ப வேண்டும் என பல முயற்சிகளை செய்து அந்த நிலையில் சமீபத்தில் வருணிடம் பொய்யான பல தகவல்களை கூறி சத்யாவை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

என்னை சந்தேகப் படும் வீட்டில் நான் இருக்க மாட்டேன் என சத்யா வீட்டை விட்டு  கிளம்பினாள் எனவே ஒரு பையை தூக்கிக்கொண்டு நடுரோட்டில் சென்று கொண்டு இருக்கிறாள் அப்பொழுது கார்த்திக் நடுரோட்டில் பார்த்துவிட்டு வீட்டுக்கு வா என்று அழைத்தும் எல்லாத்துக்கும் நீங்கள்தான் காரணம் என திட்டுகிறாள் சத்யா.

பிறகு இரவு நேரத்தில் தனியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ரவுடிகள் வழியை மறித்து தப்பாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.  யார் வந்து சத்யாவை காப்பாற்றுவார் என்று தெரியவில்லை. இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

Leave a Comment