சத்யாவிற்கு இரண்டாவது கல்யாணம் செய்ய முயற்சிக்கும் மல்லிகாவின் அண்ணன்.! உச்சக்கட்ட கோபத்தில் சொரணம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் அமோக வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது சீசனும் ஒளிபரப்பாகி அறிமுகமான சில வாரங்களிலேயே டிஆர்பி-யில் முன்னணி இடத்தைப் பிடித்து வரும் சீரியல்தான் மௌன ராகம் 2.

இந்த சீசனில் ஸ்ருதி மற்றும் சக்தி இருவரும் பெரிய பெண்களாக வளர்ந்து ஒரே வீட்டில் மருமகள்களாக வாழ்ந்து வருகின்றனர். முதல் சீசனில் இருந்தது போலவே ஸ்ருதி சத்யாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்து வருகிறார். சத்யாவும் தனது அப்பா கார்த்திக் தான் என்று கூறாமல் இருந்து வந்தாள்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு ஸ்ருதியின் சூழ்ச்சியினால் சத்யா வீட்டை விட்டு வெளியேற நிலமை ஏற்படுகிறது. இவ்வாறு இந்த பிரச்சனை போய்க்கொண்டிருக்கும்போது சத்யா கார்த்திக் கிருஷ்ணா தான் என்னுடைய அப்பா மல்லிகா தான் என்னுடைய அம்மா என அனைத்து உண்மைகளையும் கூற வருணின் குடும்பத்தினர்கள் அதிர்ச்சியடைந்து விடுகிறார்கள்.

பிறகு சத்யா தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். வருண் எப்படியாவது சத்யாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று விட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்தோம் மல்லிகா சத்யாவிடம் இதற்கு மேல் அங்கு போக கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டாள்.

ஆனால் சத்யாவை அழைத்துக் கொண்டுதான் நான் என் வீட்டிற்கு போவேன் என்று பிடிவாதமாக இருந்து வருகிறான் வருண். வருணின் அப்பா மனோகரன் மற்றும் அத்தை ஆகியோர்கள் வந்து மல்லிகாவிடம் பேசினாலும் கூட மேலும் பிரச்சனை தான் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது தங்க இடமும் சாப்பிடுவதற்கு பணமும் இல்லாத காரணத்தினால் தேய் இலை தோட்டத்தில் வேளையை செய்கிறார் வருண்.இதன் மூலம் சத்யாவிடம் பேசுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது மேலும் சத்யா தனது அம்மாவிற்கு தெரியாமல் வருணிற்கு உணவை சமைத்து அனுப்பி வைக்கிறாள் வருண் மகிழ்ச்சியாக சாப்பிடுகிறான்.

இப்படிப்பட்ட நிலையில் சத்தியா வீட்டிற்கு தெரியாமல் வருணுக்கு உணவு அளித்ததை கண்டுபிடித்த மல்லிகாவின் அண்ணன் சத்யாவின் பின்னாடியே சுற்றி வருகிறார். இதனை பார்த்த சொரணம் கோபமடைந்து அவங்க புருஷன் பொண்டாட்டி தானே ரெண்டு பேருமே அக்கறையா இருக்காங்க சத்யாவும் நமக்கு தெரியாமல் சாப்பாடு கொடுக்கிறாள்,  அந்தத் தம்பியும் இவளுக்காக சாப்பிடறதுக்கு சாப்பாடு இல்லாம, இருக்க இடம் இல்லாம கார்லயே தங்கி வருகிறார் என்று கூறுகிறார்.

ஆனால் மல்லிகாவின் அண்ணன் நான் சத்யாவிற்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் தருவேன் என்று கூற சொரணம் கோபப்படுகிறார். இதுதான் எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment