வருண் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற்றிய ஓனர்.! நடுரோட்டில் நிற்கும் வருண்.. மனம் மாறுவாரா சத்யா.! வெளிவந்த இன்றைய எபிசோட்..

முதல் சீசன் அமோக வெற்றியை பெற்று முடிந்த நிலையில் இரண்டாவது சீசனும் அறிமுகமான சில காலகட்டத்திலேயே டிஆர்பி-யில் இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் சீரியல் தான் மௌனராகம். சீரியலில் தொடர்ந்து ஏராளமான டுவிஸ்ட்கள் இருந்து வருவதால் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஸ்ருதியின் சதி திட்டத்தால் சத்யா வீட்டை விட்டு வெளியேற பிறகு சத்யா கார்த்திக் கிருஷ்ணா தான் எனது அப்பா என்றும் அவரின் முதல் மகள் தான் என்றும் கூற அனைவரும் சத்தியா யாமத்து விட்டதாக எண்ணி சத்யாவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு சத்யா தனது அம்மா மல்லிகாவுடன் இருந்து வருகிறார்.

எப்படியாவது சத்யாவின் மனதை மாற்றி தன் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்பதற்காக வருண் மல்லிகாவின் அண்ணன் அண்ணியை பார்த்து சத்யாவின் பிரெண்ட் என்று கூறிவிட்டு பழகி வந்தார். பிறகு மல்லிகாவின் வீட்டிற்கு அவர்களை அழைத்து செல்ல மல்லிகா இவர்தான் சத்யாவை திருமணம் செய்து கொண்டார் என்று கூறுகிறார்.

பிறகு வருணை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் அவர்களின் பக்கத்து வீட்டிலேயே வருண் குடியிருந்து வருகிறார். மேலும் வருணின் அப்பா, அத்தை பேசியும் மல்லிகா மற்றும் அவரின் அண்ணன் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பிறகு வரும் சத்யா இல்லாமல் நான் வீட்டுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டு அந்த வீட்டிலேயே கூடியிருந்த வர இப்பொழுது அந்த வீட்டுக்காரர்களும் மல்லிகாவை எனக்கு பதினைந்து வருடங்களாக தெரியும் இதற்குமேல் உன்னை இந்த வீட்டில் குடி வைத்திருக்க மாட்டோம் என வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள்.

பிறகு யாரும் இல்லாத நேரத்தில் சத்யாவிடம் பேச முயற்சிக்கிறார் வருண். பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சத்யாவின் மாமா வர வருணனை விட்டுவிட்டு சத்யாவை அழைத்து செல்கிறார். இதற்கு மேல் வருண் எங்கு தங்குவார் என்று தெரியவில்லை.

Leave a Comment