பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக விபரீத முடிவை எடுத்த வருண்.! அதிர்ச்சியில் மனோகரன்..

விஜய் டிவியில் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது பாகத்தையும் அறிமுகப்படுத்தி அறிமுகமான சில காலங்களில் டிஆர்பி -யில் இடத்தைப் பிடித்த சீரியல்தான் மௌன ராகம் 2.  இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சத்யா தனது அம்மாவுடன் இருந்துவரும் நிலையில் அவரை எப்படியாவது தனது வீட்டிற்கு அழைத்து சென்று விட வேண்டும் என வருண் பல முயற்சிகளை செய்து வருகிறான். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சத்யாவின் மாமா நீ ஒரு பாட்டை ஒழுங்கா பாடினா சத்யாவை உன்னுடன் அனுப்பி வைக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக வருண் தொடர்ந்து பாட்டு கற்றுக் கொள்ளும் முயற்சியில் இருந்து வருகிறார்.  மேலும் வருண் தனது தம்பி தருணுக்கு போன் போட்டு தனக்கு உதவுவதற்கு வரச் சொல்கிறார்.  பிறகு தருணிடம் பாட்டு பாடுவதை பற்றி கூற பாட்டு பாடுவது தான பார்த்துக்கலாம் என்று கூறுகிறார்.

பிறகு இதனைப்பற்றி தருண் தனது அப்பாவிடம் கூட மனோகரன் ஸ்கூல் படிக்கும் பொழுது வருணுடைய பாட்டு டீச்சர் வருணுக்கு சொல்லிக் கொடுத்தா எனக்கு பாட்டு மறந்து போய்விடும் என்று கூறியது ஞாபகம் வந்து அதிர்ச்சியடைகிறார். இவரைத் தொடர்ந்து வருணின் அத்தையும் இதனைக் கேட்டு விட்டு சிரிக்கிறார்.

இவ்வாறு வருண் எப்படியாவது பாடி சத்யாவை வீட்டிற்கு அழைத்து சென்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.  அதற்காக தற்போது தண்ணீரில் இறங்கி கழுத்து வரையிலும் இருக்கும் ஆழத்திற்கு சென்று பாட்டு பாட முடிவெடுத்துள்ளார் வருண் தான் இன்றைய எபிசோடு நடக்க இருக்கிறது.

Leave a Comment