பாட்டு பாட முடியாமல் தனது வீட்டிற்கு திரும்பிய வருண்.! கடைசி நேரத்தில் உதவி செய்த கார்த்திக்..

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் மௌன ராகம் 2. இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.  சத்யா, சுருதி இருவரும் ஒரே வீட்டில் மருமகள்களாக வாழ்ந்து வரும் நிலையில் சத்தியா தனது கணவரின் வீட்டை விட்டு வெளியில் வந்து தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.

எப்படியாவது சத்யாவை தன்னுடன் அழைத்து சென்றுவிட வேண்டும் என்பதற்காக வருண் பல முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் சத்யா வீட்டிற்கு வரக்கூடாது என்பதற்காக வருணின் அத்தை பல திட்டங்களை செய்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலை சத்யாவிற்கு பாட்டு பாட மட்டும்தான் தெரியும் வேற என்ன தெரியும் என வருணின் அத்தை திட்ட உடனே சத்யாவின் மாமா வருணிடம் நீ ஒரு பாட்டு நல்லா பாடிட்டு சத்யாவை அழைத்துட்டு போலாம் என்று கூறுகிறார்.

எனவே வருணும் பாட்டு பாடுவதற்காக பல முயற்சிகள் செய்தும் பாட்டு பாட வரவில்லை என்பதனால் மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார். வருண் காரில் வர சத்தியா ஓடிவந்து வருணை போக வேண்டாம் என்று கார்த்திகை வர சொல்லி வருண் இருக்கு பாட்டு பாட கத்து தர சொல்கிறார்.

மேலும் ஒருவர் வந்து மல்லிகாவிடம் நம்ம ஊருக்கு கார்த்திக் சார் வந்திருக்கிறார் என்று கூற சத்தியா கார்த்திகை சந்தித்து உங்களை நான் எத்தனையோ முறை அவமானப்படுத்தி இருக்கிறேன் ஆனா அதெல்லாம் மறந்து நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி என்று கூறிவிட்டு இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறார்கள் இது தான் இன்று எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment