காற்றுக்கென்ன வேலி சீரியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய இயக்குனர்.!

சின்னத்திரை சீரியல்களில் கல்லூரி வாழ்க்கையை மையமாகக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான், காற்றுக்கென்ன வேலி இந்த கதையில் கல்லூரி கதைகளோடு மட்டுமல்லாமல் காதல், சண்டை போன்ற வாழ்க்கையின் பரிணாமங்களை கொண்டு எடுத்துரைத்து வருகிறது.

இந்த சீரியலில் தன் அப்பாவை எதிர்த்து ஆசிரியரின் உதவியினால் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வெண்ணிலா காலப்போக்கில் கல்லூரியின் பேராசிரியர் சூர்யாவை தன்னையறியாமல் காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களின் காதல் கை கூடுமா என்ற கதையை வைத்து இந்த ‘காற்றுக்கென்ன வேலி்’ என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏற்கனவே வெண்ணிலா மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் தர்ஷனின் விலகலுக்கு பின்பு சூர்யாவின் கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் அனந்தராமன் நடித்து வருகிறார். அவர் இதற்கு முன் மிதுன ராசி என்ற சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து கன்னடா சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த சீரியலை குறித்து ஒரு புதிதான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. காற்றுக்கென்ன வேலி சீரியலின் இயக்குநர் மாற்றப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. புது இயக்குனருடன் வெண்ணிலா மற்றும் சூர்யா இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் பரவி வருகின்றன.

இதைக் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, அதேபோல் இந்த புது இயக்குனர் பல சீரியல்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியல் பழைய இயக்குனர் இவர்தான் சன் டிவியில் பிரியமானவள் என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

serial 2
serial 2

சமீபத்தில் இந்த சீரியலுக்கு விஜய் டெலிவிஷன் விருதுகளில் ஒரு விருது கூட கிடைக்கவில்லை. என்று ரசிகர்கள்பெரிதும் சோகத்தை அடைந்தனர், குறிப்பாக இந்த சீரியலுக்கு இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.இதனைத் தொடர்ந்து அடுத்த விஜய் டெலிவிஷன் விருதுகளில் விருது வாங்கபடுவதாக எதிர்பார்க்கப்பட்டுள்ள து.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment