அபியின் சூழ்ச்சியினால் வெண்ணிலாவை கைது செய்த போலீசார்கள்.! வெளிவந்த இன்றைய ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் ஆல்டைம் ஃபேவரைட் சீரியல் என்றால் லிஸ்டில் தற்போது காற்றுக்கு என்ன வேலி சீரியலும் இடம்பெற்றுள்ளது.350 எபிசோடுகளை தாண்டியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

பல பிரச்சனை வந்தாலும் அனைத்தையும் தள்ளி விட்டு தனது படிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியல் முழுக்க முழுக்க ஒரு சாதாரண பெண்ணின் கதையை வைத்து அவன் ஒளிபரப்பாகி வருகிறது.

சீரியலில் ஹீரோவாக சூர்யா என்ற கதாபாத்திரத்தின் சுவாமிநாதனும் ஹீரோயினாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா குமாரும் நடித்து வருகின்றனர். தற்பொழுது சாரதாவுக்கு துணையாக வெண்ணிவே சூர்யா வீட்டில்தான் இருந்து வருகிறார்.

இருவரும் மனதிற்குள் காதலித்து வந்தாலும் வெளிப்படையாக தற்பொழுது வரையிலும் கூறவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தற்போது பேச்சு போட்டிக்காக வெண்ணிலா மற்றும் சூர்யா இருவரும் டெல்லி சென்றிருந்தார்கள். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

அதற்காக அகில இந்திய அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் நம்முடைய கல்லூரி மாணவி வெண்ணிலாவுக்கு புகழாரம் சூட்ட வேண்டும் என்பதற்காக கல்லூரி தரப்பில் இருந்து புகழாரம் சூட்டும் விழா நடைபெறுகிறது. இவர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கூட்டத்தில் இருந்த ஒருவர் வெண்ணிலா டெல்லியில் பேசி ஜெயித்த கட்டுரை என்னுடையது என்றும் வெண்ணிலா ஜெயிக்கும் இரண்டு லட்ச ரூபாய் பணத்தில் எனக்கு பாதி தந்து விடுகிறேன் என்று கூறி 50 ஆயிரம் முன்கூட்டி பணம் கொடுத்த புகைப்படம் ஒன்றையும் காட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். போலீசார் வெண்ணிலாவையும் கம்ப்ளைன்ட் செய்த நபரையும் அழைத்துக் கொண்டு செல்கின்றனர்.

மேலும் இவ்வாறு அந்த நபரை விரைவில் சூர்யா கண்டுபிடிப்பார் இதற்கு காரணமாக அபி தான் இருப்பார் என்று தெரியவருகிறது. இந்த பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் சூர்யா என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Comment