முடிவுக்கு வந்த சீரியலை மீண்டும் தொடர முடிவு எடுத்த விஜய் டிவி.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசனையும் ஒளிபரப்பி வரும் சீரியல்தான் மௌன ராகம். தற்பொழுது தன்னுடைய அப்பா பாசத்திற்காக ஏங்கும் மகளை மையமாக வைத்து விஜய் டிவி மௌனராகம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்பா யார் என்று தெரியாமலேயே வளரும் மகள் ஒரு கட்டத்தில் தன்னுடைய அப்பாவை கண்டுபிடிக்கிறாள் அப்படி தெரிந்தும் அவளால் சேர முடியவில்லை இதோடு முதல் சீசன் முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது பழைய கதையை மையமாக வைத்து கூடுதல் கதையை சேர்த்து இந்த சீரியல் ஒளிபரப்பாகப்பட்டு வந்த நிலையில் பல திருப்பங்களுடன் காதல் காட்சிகளும் இடம்பெறும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது விஜய் டிவி தொடர்ந்து டிஆர்பியில் பெரிதும் அடி வாங்கி வரும் நிலையில் சில சீரியல்களை முடிவுக்கு வர விஜய் டிவி முடிவு செய்தது இப்படிப்பட்ட நிலையில் மௌனராகம் சீரியல் சில காலங்களாக மிகவும் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கை பெற்றுள்ளது.

எனவே ரசிகர்கள் ஆதரவால் இந்த சீரியல் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது எனவே இந்த சீரியல் தற்பொழுது முடிவுக்கு வரவில்லை என சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். தற்பொழுது இறந்து விட்டதாக நினைத்து வந்த வருணின் அம்மா உயிரோடு இருக்கிறார்.

எனவே அவரை காதம்பரி கடத்தி வைத்துள்ள நிலையில் ஸ்ருதி வருணின் அம்மாவை அழைத்து அவர்களிடம் சேர்த்தால் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நினைக்கிறார். மேலும் சத்தியா கார்த்திக் என்னுடைய அம்மாவுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என போராடி வருகிறார்.

Leave a Comment