சத்தியம் செய்துவிட்டு கண்ணு முன்னு தெரியாமல் குடித்த ஜீவா.! நடுரோட்டில் விழுந்துகிடந்த ஜீவாவை வீட்டிற்கு அழைத்து வரும் ப்ரியாவின் அப்பா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஈரமான ரோஜாவே சீசன்2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏனெனில் இந்த நாடகத்திற்கு மக்கள் எமோஷனலாக அடிக்ட் ஆகியுள்ளனர்.

இந்த நாடகத்தில் காதலித்து பிரிந்த இரு ஜோடிகள் ஒரே வீட்டில் இருவேறு நபர்களுடன் திருமணமாகி இருவரும் பார்த்துக் கொள்ளும் நிலையில் உள்ளனர், இது மிகவும் கொடுமையான ஒன்று.

தற்போது வெளியான இந்த நாடகத்தின் ப்ரோமோ வீடியோவில் ஜீவா காதலித்து வந்த காவியா அவரது அண்ணனுக்கு மனைவி ஆன நிலையில் தற்போது ஜீவாவை சந்தித்து நான் விவாகரத்து செய்யப் போகிறேன் என்று கூறுகிறார், அதற்கு ஏன் இப்படி செய்கிறாய் என்று ஜீவா கேட்க எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்னைவிட கஷ்டத்தில் உன் அண்ணா இருப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார்.

அதன் பிறகு ஜீவா தன் மனைவிக்கு செய்த சத்தியத்தை மீறி நன்கு குடித்துவிட்டு கடவுளிடம் நான் உன்னிடம் எத்தனை தடவை வேண்டி இருப்பேன் எத்தனை தடவை அதற்காக விளக்கு ஏற்றி வைத்திருப்பேன் ஆனால் அனைத்தையும் ஊதி நீயே அனைத்து விட்டாயே ஏன் இப்படி செய்தாய் என்று கூறி ரோட்டில் விழுந்து விடுவார்.

அதன்பிறகு அவ்வழியே வந்த அவரது உறவினர் ஜீவாவை தூக்கிக்கொண்டு, ஜீவா கீழே விழுந்துகிடக்கிறார் என்று அவரது மனைவிக்கு கால் செய்து சொல்லிவிடுவார், சம்பவ இடத்திற்கு வந்த பிரியா நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறி வீட்டிற்கு அழைத்து செல்வார் அதன்பிறகு காலை “நீங்கள் இவ்வாறு செய்ய ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அதை சொல்லுங்கள் அதன்படி நான் உங்களுடன் இருப்பேனா இருக்க மாட்டேனா என்று நான் கூறுகிறேன்” என்று சொல்கிறார் அதற்கு ஜீவா நான் ஒரு பெண்ணை காதலித்தேன் என்று உண்மையை சொல்லும்படி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

Leave a Comment