காதல் தோல்வியினால் விபரீத முடிவை எடுத்த ஜீவா.! இன்றைய எபிசோட்.

விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணி அளவில் ஒளிபரப்பப்படும் நாடகம் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த நாடகத்தின் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதனுடைய இரண்டாம் பாகமும் அதே அளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இக்கதையில் ஜீவா இன்னும் வேடத்தில் திரவியம் நடிக்கிறார்,காவியா இன்னும் வேடத்தில் கேப்ரியலா நடிக்கிறார், மேலும் சித்தார்த் ஜீவாவின் அண்ணனாகவும், சுவாதி என்பவர் காவியாவிற்கு அக்காவாக உள்ளார்.

இதில் காவியாவும் ஜீவாவும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்தனர் மிக அழகாக சென்றிருந்த இவர்களது காதல் தற்பொழுது மிகக் கொடுமையானதாக உள்ளது. ஜீவாவின் அண்ணனுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் சுவாதியை கடத்தி செல்கின்றனர்,

சுவாதியை ஜீவா மீட்டு வருவதற்குள் சித்தார்த்திற்கு காவியா தான் மனைவி என்று காவியாவை திருமண பெண்ணாக மாற்றி விட்டனர், இந்நிலையில் சித்தார்த் காவியாவிற்கு தாலி கட்டும் நிலையில் ஜீவா சுவாதியுடன் மண்டபத்திற்கு முன் நின்று பார்க்கும் இவர் மிகவும் அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு மூத்த மருமகளாக காவியாவும்,இளைய மருமகளாக சுவாதியும் ஜீவா வீட்டிற்கு செல்கின்றனர். சமீபத்தில் வெளியான இந்த நாடகத்தின் ப்ரோமோவில் ஜீவா தனது காதல் தோல்வியினால் மதுபானம் அருந்தும் காட்சிகளும் காவியா அழுதுகொண்டே இருக்கும் காட்சிகளும் வெளியானது, இவர்களது அறை முதலிரவு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் ஜீவா அழுது கொண்டிருக்கிறார், காவியாவும் கண்ணீர் மல்க அழுகிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் கமென்ட் செக்ஷனில் “கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான் விஜய் டிவி நாடகத்தை பார்த்தது தப்புதான்” இன்று எமோஷனலாக கூறியுள்ளனர். இந்த நாடகத்தில் மேலும் இனி என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்.

Leave a Comment