காவியாவை ரூமில் வைத்து பூட்டிய வாட்ச்மேன்.! தாலி கோர்க்கும் நிகழ்ச்சிக்கு வரவில்லை என புலம்பும் குடும்பத்தினர்கள்..

பொதுவாக ஒரு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பி-யில் மிக பெரிய சாதனை படைத்து விட்டால் அதனை இரண்டாவது சீசன் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சமயம் அறிமுகப்படுத்தி அறிமுகமான சில வாரங்களிலேயே டிஆர்பி-யில் இடம் பிடித்த சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2.

இந்த சீரியலின் கதை மற்றும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பார்திக்கு என்று பார்த்து வைத்திருந்த பிரியாவை ஜீவாவும், ஜீவா காதலித்து வந்த காவியாவை பார்த்து திருமணம் செய்து கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட பிரியா ஜீவாவுடன் வாழ வேண்டுமென விரும்புகிறான் மேலும் ஜீவா கொஞ்சம் கொஞ்சமாக பிரியாவிற்காக மாறி வருகிறான். பார்த்திபனும் காவியாவை ஏற்றுக்கொண்ட நிலையில் காவியா எனக்கு டிவோர்ஸ் வேண்டும் என கூறி வருகிறார்.

மேலும் ஆறு மாசம் டைம் கொடு அப்போதும் உனக்கு மனம் மாறவில்லை என்றால் தாராளமாக விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என கூறிவிட்டான். இப்படிப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ பிரியா மற்றும் காவியா இருவருக்கும் தாலி கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காவியா கோசிங் க்ளாஸ் செல்ல போகும் பொழுது அவருடைய போன் காரில் விழுந்துவிடுகிறது. மேலும் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ரூமை பூட்டி விட்டு அனைவரும் சென்று விடுகிறார்கள் அது தெரியாமல் காவியா படித்துக் கொண்டிருக்கிறார் ஒரு கட்டத்திற்கு பிறகு வீட்டிற்க்கு போகலாம் என்று கிளம்பும் பொழுது ரூமில் மாட்டிக் கொண்டது தெரிய வருகிறது.

வீட்டில் இருப்பவர்கள் காவியாவிற்கு பார்த்தியின் மீது ஆசை இல்லை அதனால் தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்று பலவற்றையும் சொல்லி வருகிறார்கள் ஆனால் பார்த்திபன் காவியாவை தேடி இன்ஸ்டியுட்டுக்கு கிளம்பி வருகிறார்.

அப்பொழுதே ஹெல்ப் மீ என்று எழுதி வெளியே தூக்கி போட்டு இருந்த பேப்பரை பார்க்கிறார். உடனே பூட்டை உடைத்து விட்டு பார்க்கும் பொழுது காவியா மயங்கி விழுந்து கிடக்கிறார் உடனே பார்த்திபன் காவியாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறாள் இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment