கவியா, ஜீவாவின் காதலை தெரிந்து கொண்ட அம்மா.! அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்.

விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.எனவே தொடர்ந்து 2வது சீசன் ஒளிபரப்பு வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான சில காலங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே.

இந்த சீரியலின் முதல் சீசன் அமோக வெற்றியைப் பெற்ற நிலையில் 2-வது சீசன் அதைவிடவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் பிக்பாஸ் கேப்ரியலா மற்றும் சித்தார்த், சுவாதி, தீபக் குமார், ஆர்த்தி ராம்குமார் உள்ளிட்ட இன்னும் பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியல் முழுவதும் குடும்ப கதையை மையமாக வைத்துதான் ஒளிபரப்பாகி வருகிறது.அந்த வகையில் தனது அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட பையனின் தம்பியை கதாநாயகி காதலித்து வர திருமணத்தின் பொழுது அக்கா காணாமல் போனதால் அந்த மாப்பிள்ளைக்கு கதாநாயகியை கட்டி வைத்து விடுகிறார்கள்.

பிறகு கதாநாயகியின் காதலரை அக்கா  திருமணம் செய்து கொள்கிறார்.  அப்படி எந்த விருப்பமும் இல்லாமல் பெற்றோர்களின் விருப்பத்திற்காக தனது ஆசையை மறைத்துக்கொண்டு கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் திருமணமான சில நாட்கள் கழித்து காவியாவின் டிரஸ்களை கொண்டுசென்று கொடுக்க வேண்டும் என்பதற்காக காவியாவின் அம்மாவை அனைத்தையும் எடுத்து வைக்குமாறு அப்பா கூறுகிறார் அதனை எடுத்து வைக்கும் போது தான் தெரிகிறது ஜீவாவும் காவியாவும் காதலித்தார்கள் என்று  இதன் காரணமாக அம்மா மோசம் போய் விட்டேனே என கூறி அழுது கொண்டிருக்கிறார்.

Leave a Comment