ஜீவாவால் 5 கோடி நஷ்டமான பார்த்திபன்.! உன் அப்பன அழைச்சிட்டு வா என ரகளை.. ஈரமான ரோஜாவே சீரியல் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் தற்பொழுது பார்த்திபன் காவியா இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வது போல் நடித்து வருகின்றனர்.

மறுபுறம் ஜீவா பிரியாவிடம் மன்னிப்பு கேட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை எனவே எப்படியாவது பிரியாவின் மனதை மாற்றி தனது அப்பா சொன்னது போல் பிரியாவுடன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பிரியா ஜீவாவின் மேல் பொய்யான பழியை சுமத்தி வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்.

எனவே ஜீவா தற்பொழுது நடுரோட்டில் டென்ட் ஒன்றில் தங்கி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் 5 கோடி ரூபாய் ப்ராஜெக்ட் ஜீவாவால் நாசமாகியுள்ளது. அதாவது பார்த்திபன் சைட்டுக்கு வர ஜீவாவை போன் பண்ணி வர சொல்கிறார் அந்த சைட்டின் ஓனர் தரமற்ற முறையில் பில்டிங் கட்டப்படுவதாக கூற ஜீவா ஸ்பாட்டுக்கு வந்து என்னாச்சு என கேட்கிறார்.

இந்த சைட் பொறுப்பை உன்கிட்ட தான விட்டு இருந்த என்ன வேலை நடக்குதுன்னு பாக்க மாட்டியா என கேட்க இல்லை என்னுடைய சூப்பர்வைசர் பாபு தான்  எனக் கூற பிறகு தரமற்ற முறையில் பில்டிங் கட்டப்பட்டது ஜீவாவிற்கு தெரிய வருகிறது. பாபு ஐந்து கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டார் எனவே அந்த ஓனர் பார்த்திபனை அடிக்க வர ஜீவாதனை தடுத்து நிறுத்துகிறார்.

இதன் காரணத்தினால் ஜீவாவை பார்த்திபன் அறைந்து விடுகிறார். அந்த பில்டிங் ஓனர் எனக்கு 5 கோடி ரூபாய் திரும்பி தராங்க என சொல்கிறார். இல்லை என்றால் புதுசா பில்டிங் காட்டித்தாங்க என கூற பார்த்திபன் அதிர்ச்சி அடைகிறார் இவ்வாறு ஜீவா பாபுவை கண்டுபிடிக்க வேண்டும் எனக்கு இப்படி துரோகம் செய்துவிட்டானே என கூறுகிறார் இதோடு அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment