பல்ஸ் குறைவாகவுள்ள நிலையில் காவியாவின் கையைப் பிடித்து அழுவும் ஜீவா.! மயங்கி விழுந்த ப்ரியா.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஈரமான ரோஜாவே 2 சீரியல்

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த ஒரு நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் பார்த்திபன் மற்றும் காவியா இருவரும் எதிர்பாராத விதமாக ஒரே கோவிலுக்கு செல்கிறார்கள்.

அப்பொழுது பார்த்திபன் காவியாவிற்கு கையில் கயிறு கட்டி விடுகிறார் பிறகு இருவரும் இணைந்து பேசி விட்டு இன்ஸ்டிடியூட்டுக்கு கிளம்புகிறார்கள் காரில் போகும்பொழுது காவியா பார்த்திபனிடம் உங்களிடம் வீட்டிற்கு வந்து முக்கியமான ஒன்றைக் கூற வேண்டும் என கூறுகிறார்.எனவே காவியாவை இன்ஸ்டியூட்டில் விட்டுவிட்டு காவியா என்ன சொல்லப் போகிறார் என்பதைப் பற்றி பார்த்திபன் யோசித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இன்ஸ்டிடியூட்டில் தீ விபத்து ஏற்பட அனைவரும் ஓடுகிறார்கள். ஆனால் காவ்யா கிளம்புவதற்குள் அவரை சூழ்ந்து தீ இருப்பதால் உடனே பார்த்திபனுக்கு போன் செய்து கூறுகிறார்.பார்த்திபன் வருவதற்குள் காவியாவால் வெளியில் வர முடியாமல் மயங்கி விழுந்து விடுகிறார். பார்த்திபனை இன்ஸ்டியூட்டுக்குள் விடாமல் இருந்து வந்த நிலையில் அனைத்தையும் மீறி காவியாவை காப்பாற்றுவதற்காக ஓடுகிறார்.

பிறகு சில மணி நேரம் முயற்சித்து காவியாவை கண்டுபிடித்து தூக்கி வருகிறார். குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியில் பார்த்திபன் என அழுது கொண்டிருக்கும் நேரத்தில் பார்த்திபன் காவியாவை அழைத்து வர இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் இதனால் பார்த்திபனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காவியாவிற்கு பல்ஸ் குறைவாக இருப்பதாக டாக்டர் கூறுகிறார் இந்த நேரத்தில் பெற்றோர் ஒருவர் என் பொண்ணு கலெக்டராக வேண்டுமென ஆசைப்பட்டேனே ஆனா இப்படி ஆயிடுச்சு என கூறிய அழுது கொண்டு வருகிறார் இதனை கேட்டதும் பிரியாவிற்கு மயக்கம் வந்து விடுகிறது பிறகு ப்ரியாவை ஜீவா தாங்கிக் கொண்டு நர்சை வரவழைக்கிறார்.

அவர் காலையிலிருந்து சரியாக சாப்பிடாத காரணத்தினால் தான் இப்படியாகி உள்ளது என கூறுகிறார். எனவே ஜீவா பிரியாவை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி தருகிறார். பிறகு காவியாவின் கையை ஜீவா பிடித்துக் கொண்டு இவ்வளவு நேரமா நீ கண்ணை திறக்கவில்லை எனக்கூறி அழுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment