என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரிடமும் வசமாக சிக்கிக்கொண்ட காவியா.! சாப்பிட முடியாமல் தவிக்கும் பார்த்திபன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் ஒரு சீரியல் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றால் அதனை இரண்டாவது சீசன் ஒளிபரப்புதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2.

இந்த சீரியலில் கேபி,திரவியம்,சித்தார்த் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். தற்பொழுது காவியா தீ விபத்தில் சிக்கிக்கொண்ட நிலையில் அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது உயிரை பணைய வைத்து எப்படியோ பார்த்திபன் உயிரே காப்பாற்றி விட்டார் ஆனால் காவ்யாவை விட பார்த்திபனுக்கு தீக்காயம் அதிகமாக ஏற்பட்டுள்ளது எனவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த இவர் தற்பொழுது தான் உயிர் பிழைத்து வீட்டிற்கு வந்துள்ளார்.

பார்த்திபனின் காதலை காவியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் பார்த்திபன் தனக்காக இவ்வளவு செய்ததை காவியா நினைத்து வருத்தப்படுகிறார். ஒருபுறம் இப்படி போய்க்கொண்டிருக்க அங்கு பிரியா ஜீவாவை உருகி உருகி காதலித்து வருகிறார்.

ஜிவாவிடம் சொல்வதை நினைப்பதை எல்லாம் அவரின் சட்டையிடம் சொல்லி மிகவும் ரொமான்ஸ் செய்து வருகிறார். இதனைப் பார்த்த காவியா வருத்தப்படுகிறார். இப்படிப்பட்ட நிலை காவியா எங்கு சென்றாலும் நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறார் ஒரு பக்கம் காவியாவின் அத்தை,மாமன் இருவரும் நீ காட்டும் அன்பில் தான் அவனுக்கு உடல்நிலை சரியாகும் என கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று வெளியாக உள்ள எபிசோடில் காவியா பார்த்திபனுக்காக சாப்பிடுவதற்கு உணவு எடுத்து வருகிறார். பார்த்திபன் சாப்பிட அவரின் மேலிருக்கும் காயங்கள் வலி ஏற்படுகிறது இதன் காரணமாக காவியா ஊதி ஊதி சாப்பாடை போட்டு விடுகிறார் இதனை பார்த்திபன் பார்த்து ரசிக்கிறார் அந்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

Leave a Comment