நரேன் மற்றும் தேவியின் மேல் கடும் கோபத்தில் இருக்கும் ஜீவா.! வருத்தத்தில் ப்ரியா..

விஜய் டிவியில் சமீபத்தில் அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் நடித்த வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்களும் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இளசுகளின் மனதை கவர்ந்து தற்பொழுது ஃபேவரட் ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ஜீவா மற்றும் பிரியா.

ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோடில் காவியா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது காவியாவின் கையில் மருதாணி வைத்த நிலையில் காவியா பார்த்திபனை பளார் என அறைந்திவிட்டார். இதன் காரணமாக இன்று பார்த்திபன் ஒரு பெண்ணுக்கு கையில் மருதாணி வைத்தாள் அவள் அழகாக இருப்பார் மேலும் சூடும் குறையும் என கூறிக் கொண்டிருக்கிறார்.

அதற்காக இவ்வளவு வைலன்சா இருப்பனு நான் நினைக்கவே இல்ல என கூற உடனே காவியா உங்கள மாதிரி ஆளுகிட்ட எல்லாம் இப்படித்தான் நடந்துக்கணும் என கூறுகிறாய் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது காவியாவிடம் பார்த்திபன் வழிய காவியா என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து ஜீவா மற்றும் பிரியா இருவரும் வெளியில் சென்று உள்ளார்கள் அப்பொழுது பார்க்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த நேரத்தில் ஜீவா நான் நரேன் மற்றும் தேவியின் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன் அவர்களால் தான் தற்பொழுது பார்த்திபன் காவியாவையும் உங்களை நானும் கல்யாணம் செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

இதனால் அனைவரும் சந்தோஷமாக இல்லாமல் மன வருத்தத்திலிருந்து வருகிறோம் இவ்வளவு கஷ்டத்திற்கும் அவர்கள்தான் காரணம் எனக் கூறுகிறார் உடனே ப்ரியா இப்பொழுது நாம் சமாதானமாகி புரிந்து கொண்டு சந்தோஷமாக தானே இருக்கிறோம் என கூறுகிறார்.நரேன் மற்றும் தேவியால் தான் நாம ஒன்று சேர்ந்தோம் ஆனால் அவர்களின் மீது ஜீவா கோவத்தில் இருப்பது பிரியாவிற்கு வருத்தத்தை தருகிறது.

Leave a Comment