எரியிற நெருப்பில் எண்ணையை ஊற்றிய கேப்ரில்லா தோழிகள்.! அடுத்து நடக்கப்போவது என்ன.!

விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுவரும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே சீசன் 2.இத்தொடரில் சின்னத்திரைக்கு முதன்முறையாக நடிகை கேப்ரில்லா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் இவரை தொடர்ந்து சுவாதி திரவியம் ஆகியோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் உடையதால் நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் நடித்து மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் தான் கேப்ரியலா.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த சீரியல் அறிமுகமான சில காலங்களிலேயே டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்துதான் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில குழப்பத்தின் காரணமாக ஜோடிகள் மாற்றப்பட்டது. அந்தவகையில் சித்தார்த்துக்கு கேப்ரில்லாவுடனும் திரவியத்திற்கு சுவாதிவுடனும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சித்தார்த் மற்றும் சுவாதி ஓரளவிற்கு தங்களது மனதை மாற்றிக்கொண்டு இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் திரவியம் மற்றும் கேப்ரில்லா இருவரும் காதலை மறக்க முடியாமல் வெறுமையாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மேலும் இந்த சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தனது அக்கா பிரியாவை யாராவது ஏதாவது சொல்லி விட்டால் உடனே அவர்களை தட்டிக் கேட்டு வருகிறார். இந்நிலையில் கேப்ரில்லா ஸ்வாதி திரவியம் மூவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அந்த நேரத்தில் சுவாதி எங்கேயோ போக கேப்ரியலா மற்றும் திரவியம் இருவரையும் பார்த்த தோழிகள் அவர்களுக்கு திருமணம் ஆனதாக நினைத்து வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும் பல வருடங்களாக காதலித்து வந்த நீங்கள் ஒன்று சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி என கூறி வருகிறார்கள். இருவரும் நடந்ததை கூறாமல் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டு மிகவும் வருத்தமடைகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சுவாதி அங்கிருந்து வந்து திரவத்திற்கு திருநீறு பூசி விடுகிறாள். கேப்ரியலா தனது மனதை மாற்றிக் கொண்டு சித்தார்த்துடன் இனிமேல் வாழ ஆரம்பிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment