பிரியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா ஜீவா.? பார்த்தியிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்தும் காவியா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அமோக வரவேற்பை பெற்றுவருகிறது இதைத் தொடர்ந்து இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள். மேலும் சூப்பர் ஹிட் சீரியலாக வளர்ந்து வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்த சீரியல் ஆரம்பத்தில் பார்த்திபனிக்கும் பிரியாவுக்கும் நிச்சயம் செய்து கல்யாணம் செய்வதற்கு முடிவு செய்தார்கள்.அப்பொழுது ஜீவாவும் காவியாவும் எதிர்பாராமல் காதலித்து வந்தார்கள். இதைத்தொடர்ந்து ரசிகர்களும் இவர்களுக்கு தான் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால் எல்லோரும் அதிர்ச்சி ஆகும்படி ஒரு பெரிய டூவிஸ்ட் ஏற்பட்டது.

இந்நிலையில் காவியா, பார்த்திபன் மற்றும் ஜீவா, பிரியா ஆகியோருக்கு எதிர்பாராமல் திருமணம் ஆகிவிட்டது அதைத் தொடர்ந்து ஜீவா குடும்ப சூழ்நிலையால் திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார். ஆனால் காவியா ஜீவாவை மறக்க முடியாததால் பார்த்திபனிடம் விவாகரத்து கொடுத்துவிட்டார். இதை பார்த்திபனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரசிகர்களுக்கு காவியா மேல் கடுப்பாகிறார்கள்.

எனவே இதைத்தொடர்ந்து காவியாவை விட்டு மனம் பிரியா முடியாததால் பார்த்திபன் காவியாவிடம் விவாகரத்து தர முடியாது என்று கூறிவிட்டார். இதை நினைத்து வேலை செய்யும் இடத்தில் சிந்தனை இல்லாமல் தடுமாறுகிறார். அப்போது பிரியா தனது பிறந்தநாளை எப்பொழுதும் குழந்தைகளுடன் கொண்டாடணும் என்று ஜீவாவையும் கூப்பிடுகிறார் அதற்கு ஜீவாவும் வருவதாக கூறுகிறார். அதைத்தொடர்ந்து பார்த்திபன் சிந்தனை இல்லாமல் இருப்பதை ஜீவா பார்த்துவிட்டு பார்த்திபனிடம் கேட்கிறார்.

இந்நிலையில் பார்திபன் எல்லா உண்மையையும் ஜீவாவிடம் கூறிவருகிறார். அதைக் கேட்ட ஜீவா விவாகரத்து வரையும் எதற்கு போகவேண்டும் என்று நினைத்து வருகிறார் இதைத்தொடர்ந்து ஜீவா செம்ம குடியில் இருக்கிறார்.அங்கே தனது பிறந்தநாளுக்கு குழந்தைகளிடம் போவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார் பிரியா.

எனவே ரசிகர்கள் காவியாவிற்கும், பார்த்திபனுக்கும், விவாகரத்து ஆகிவிடுமா? மற்றும் பிரியா தனது பிறந்தநாளுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் ஜீவா போவாரா? என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment