கட்டிடத்திலிருந்து கீழே விழப் போகும் பார்த்திபனை காப்பாற்றிய ஜீவா.! இதற்கெல்லாம் காவியா தான் காரணம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அமோக வரவேற்பைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இதைத்தொடர்ந்து டிஆர்பியில் டாப் சீரியலாக வளர்ந்து வருகிறது. மேலும் மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. மேலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த சீரியலில் காவியாவிற்கும் பார்த்திபனிற்க்கும் திருமணம் செய்வதற்கு நிச்சயம் செய்கிறார்கள்.அப்போது திருமணத்திற்கு இடையில் எதிர்பாராமல் ஜீவாவும் காவியாவும் காதலித்து வந்தார்கள். அப்போது பார்த்திபன்,பிரியா கல்யாணம் முடிந்ததும் அடுத்த கல்யாணம் ஜீவா விற்கும் காவியாவிற்கு தான் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் கொடுத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து சில காரணத்தால் இவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. பார்த்திபன் காவியாவை திருமணம் செய்து கொள்ளும் நிலமை ஏற்பட்டது. அதைதொடர்ந்து ஜீவாவுக்கும் பிரியாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த திருமணம் ஜீவாவிற்கும் காவியாவிற்கும் தலையில் இடி விழுந்தது போல் ஏற்பட்டுள்ளது. குடும்ப சூழ்நிலையால் ஜீவா அமைதியாக இருந்து வருகிறார். ஆனால் காவியா பிரிந்து வாழ்வதற்காக விவாகரத்தை எடுக்கும் முடிவை கையாளுகிறார். காவியாவின் செயல் ரசிகர்களுக்கு எச்சிலை தருகிறது.

இந்நிலையில் காவியாவின் விவாகரத்து முடிவு பார்த்திபனை மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது வேலை செய்யும் இடத்தில் அடுக்கு மாடியில் நின்று விழுந்துடுவோம் என்று கூட தெரியாமல் யோசனையில் மிதக்கிறார். அதை பார்த்த ஜீவா பதறிப் போகி பார்த்திபனை காப்பாற்றுகிறார். ஜீவாவிடம் பார்த்திபன் விவாகரத்து பிரச்சினையை கூறிவருகிறார். இதைக்கேட்ட ஜீவா இந்த முடிவை எதிர் பார்க்கவே இல்லை என்று ஜீவா அவருக்குள்ளே நினைத்து வருகிறார்.

மேலும் இதைப்பார்த்த பார்த்திபனின் அப்பா பார்த்தியை அழைத்து என்ன பிரச்சினை என்று கேட்கிறார். இந்த பிரச்சினையை மறைமுகமாக கூறி கஷ்டத்தில் இருப்பதாகக் கூறுகிறார். இதைக் கேட்ட பார்த்திபனின் அப்பா தன் மகன் கவலை படக்கூடாது என்று காவியாவை ஒன்னும் தெரியாத பொண்ணு விளையாட்டுத்தனமாக ஏதேதோ செய்து வருகிறார். நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் எல்லாம் மாறிவிடும் என்று அறிவுரை கூறி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் காவியாவிற்கு இதெல்லாம் தேவையா? என்று பல கேள்விகள் கேட்டு வருகிறார்கள். மேலும் பார்த்திபனும் காவியாவும் சேர்ந்து வாழ்வார்களா? இல்லை விவாகரத்து ஆகிவிடுமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment