டிவோர்ஸ் பேப்பரை பார்த்தியிடம் கொடுத்த காவியா.! அதிர்ச்சியில் ஈரமான ரோஜாவே குடும்பத்தினர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் சிறிது காலமாக ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியல் ஈரமான ரோஜாவே சீரியல் சீசன் 1 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் சீசன் 2 ஆரம்பித்து அதுவும் ரசிகர்களுக்கு பிடித்த சீரியலாக வளர்ந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து பார்த்திபனுக்கும் பிரியாவுக்கும் வீட்டில் உள்ளவர்கள் நிச்சயம் செய்து வந்தார்கள். அப்போது காவியாவுக்கும் ஜீவாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. திருமணத்திற்கு நாள் குறித்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோசமாக வந்தார்கள். அப்போது திருமண நாளன்று பிரியாவை முன்னாள் காதலன் கடத்திச் சென்றதால் வீட்டின் கட்டாயத்தினால் காவியா பார்த்திபனை திருமணம் செய்து விட்டார்.

ஆனால் பிரியாவை கடத்திச் சென்றதை ஜீவா பார்த்துவிட்டு பிரியாவை காப்பாற்றி மண்டபத்திற்கு அழைத்து வந்து பார்த்தபோது பார்த்திபனுக்கும் காவியாவிற்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அதை பார்த்த ஜீவாவிருக்கு உயிரே இழந்து விட்டது போல் என்று உடைந்துவிட்டாா். ஜீவா அதைத்தொடர்ந்து பிரியாவுக்கும் ஜீவாவிற்கும் கல்யாணம் செய்து விட்டார்கள். இந்த கல்யாணம் ஜீவா விற்கும் காவ்யாவிற்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தன.

இந்நிலையில் வீட்டின் சூழ்நிலைக்கு அமைதியாக இருந்து விட்டார்.ஆனால் காவியா இதையெல்லாம் ஏத்துக்க முடியாததால் பார்த்திபனிடம் விவாகரத்து கொடுத்துள்ளார்.அந்த புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளார்கள். காவியாவிற்கு இதெல்லாம் தேவையா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் .

இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் உயிருக்கு மேலாக பார்த்திபனை ரம்யா காதலித்து வருகிறார். இதையெல்லாம் சிறிதும் மதிக்கவில்லை. காவியா மேல் பார்த்திபனுக்கு சிறிதளவில் காதல் ஏற்பட்டுவிட்டது. பார்த்திபன் எதிர்பாராத அளவில் காவியா விவாகரத்து செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விவாகரத்து ஆகி விடுமா? இல்லை ஒன்றாக சேர்ந்து விடுவார்களா? என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment