ப்ரியாவுக்காக ஜீவா செய்த விஷயம்.! என்ன சொல்வதென்று தெரியாமல் நெகிழ்ச்சியில் ப்ரியா..

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சீரியலுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி விஜய் டிவி. விஜய் டிவி எப்படியாவது தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றார்கள்.

அந்த வகையில் முதல் சீசன் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் தற்பொழுது இரண்டாவது சீசன் அறிமுகமான சில கால கட்டத்திலேயே டிஆர்பி-யில் முன்னணி வசித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ள சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. முதல் சீசனில் ஹீரோவாக நடித்த திரவியம் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மற்ற நடிகர், நடிகைகளை புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்த சீரியல் அண்ணனுக்கு என்று பார்த்து வைத்த பெண்ணை தம்பிக்கும் தம்பி காதலித்த பெண்ணை அண்ணனும் திருமணம் செய்து கொள்கின்றார்கள்.

இவ்வாறு மாற்றி திருமணம் நடப்பதால் இதனை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்துதான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.  அந்த வகையில் தற்பொழுது ஜீவா பிரியாவிற்காக சில விஷயங்கள் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என முயற்சி செய்கிறான்.

இவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் காவியாவுடன் இணைந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும் காவியா அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் மேலும் தற்பொழுது டிவோர்ஸ்  பேப்பரையும் வாங்கியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோவில் ஜீவா தனது நெஞ்சில் காவியா என்ற பெயரை பச்சை குத்தி இருப்பார் இதனைப் பார்த்த ப்ரியா அதனைப் பற்றி கேட்டவுடன் ஜீவா அந்த பெயரை அழித்துவிட்டு வந்துவிடுகிறான்.  இதனைப் பற்றி பிரியாவிடம் கூற பிரியா மகிழ்ச்சியில் அழுது கொண்டே பச்சை குத்தியதை எடுத்ததுபோல் சீக்கிரம் மனதில் இருந்தும் அந்தப் பெண்ணை மறந்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார்.

Leave a Comment