பார்த்திபன் செய்கின்ற காரியத்தால் வருத்தத்தில் இருந்து வரும் அவரின் அம்மா.! கடும் கோபத்தில் ப்ரியா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் பல விறுவிறுப்பான காட்சிகள் ஒளிபரப்பி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இந்த டிஆர்பி_யில் முன்னணி வகிக்கவும் தொடங்கியுள்ளது.

பார்த்திபன் காவியாவை காதலிக்க ஆரம்பித்துள்ள நிலையில் காவியா திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்தார் என்பதை அறிந்து கொண்ட பார்த்திபனின் அம்மா நீ பார்த்திபனை விட்டு விலகியே இரு அவனை உன்னை வெறுக்க வைத்துவிடு எனக் கூறி அழுகிறார்.

ஒரு பக்கம் குழந்தையை வைத்துக்கொண்டு பிரியாவை ரவுடியில் ஒருவர் மிரட்டி வருகிறார். சமீபத்தில் வெளியாகிவுள்ள எபிசோடில் அத்தை காவியாவை டீ பாய் கீழே விழுந்த நிலையில் அதனை எடுத்துவை என மிரட்டுகிறார் அதற்கு காவியா உங்கள் காலின் அடியில் தான் இருக்கு நீங்களே எடுத்துவை எனக் கூற அப்பன் மாதிரியே புத்தி இருக்கு என்ன திட்டுகிறார்.

ப்ரியா வருகிறார் அவரிடம் நம்ம அப்பாவை அவன் இவன் என்ன திட்டுகிறார் எனக் கூற நம்மளை திட்டிக் கொண்டாலும் அதனை பொறுத்துக் கொண்டுதான் போக வேண்டும் எனக் கூறுகிறார். பிறகு பார்த்திபன் தனது ரூமில் காவியாவை மறைந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரூமிற்கு வந்தது கூட தெரியாமல் ரசித்துக் கொண்டிருக்கிறார் அதனை பார்த்துவிட்டு தனது கையில் வைத்திருந்த டீயை கீழே போட்டு விடுகிறார்.

பார்த்திபனுக்கு தனது அம்மா வந்தது தெரிகிறது. அதன் பிறகு இதனை பாருங்க என்று கூற அவர் மிகவும் தத்ரூபமாக வரைந்து இருக்க என கூறுகிறார் கூறிவிட்டு வெளியே சென்றவுடன் பார்த்திபன் எப்படி பார்த்தாலும் அழகாய் இருக்கிறாய் என கூறுகிறார்.

பிறகு பார்த்திபனின் அம்மா காவியாவை அழைத்து வந்து எந்த அளவு இருக்கு காதலித்தால் இப்படி எல்லாம் உன்னை வரைவான் ரொம்ப பயமா இருக்கு என கூறி வருத்தப்படுகிறார். பிரியாவை மிரட்டிய ரவுடி பார்த்திபனின் அத்தைக்கு போன் செய்து நீங்க கவலைப்படாதீங்க இந்த விஷயத்துக்கு உங்களுக்கும் சம்பந்தம் இருக்கு என வெளியில் தெரிய வராது என கூறுகிறார். இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment