காவியாவுக்கு ரோஸ் கொடுத்த பார்த்திபன்.! ஐடியா சொன்ன ப்ரியா.! இன்றைய எபிசோட்.

விஜய் டிவியில் சமீபத்தில் அறிமுகமாகி தற்போது உள்ள இளைஞர்கள் மனதை கவர்ந்து  டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலின் முதல் சீசன் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் 2-வது சீசன் அதைவிடவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் சீசனில் இருந்த திரவியத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்து நடிகர் நடிகைகளையும் புதிதாக களமிறக்கி உள்ளார்கள். அந்தவகையில் இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக கேப்ரில்லா  அறிமுகமாகியுள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது சின்னத்திரை தொடர்ந்துள்ளார்.

இந்த சீரியல் ரொமான்ஸ் காதல் என்று மிகவும் அழகாக போய்க்கொண்டு இருந்த நிலையில் தற்போது ஜோடி மாற்றி திருமணம் நடந்து அவர்கள் எப்படி வேதனைப்படுகிறார்கள் அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாமல் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தி வருகிறது.

பார்த்திபன் மற்றும் பிரியா இருவரும் பெட்டகத்தை வாழ்க்கையை இதற்கு மேல் ஏற்றுக் கொள்ளலாம் என்று துணிந்து ஓரளவிற்கு வாழ ஆரம்பித்து வருகிறார்கள்.  ஆனால் ஜீவா மற்றும் காவியா இருவரும் தங்களது காதலை மறக்க முடியாமல் அனைத்தையும் வெறுத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் காவியா கலெக்டராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கோச்சிங் கிளாஸ் செல்ல முடிவெடுத்துள்ளார். பிறகு பிரியாவும் தனது வேலையை செய்ய ஆரம்பித்துள்ளார். எனவே காவியா திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக கோச்சிங் கிளாஸ் செல்வதால் பார்த்திபன் நானே உன்னை அழைத்துச் சென்றேன் விடுகிறேன் என்று கூறி ரோஸ் ஒன்றியம் அவருக்கு பிடித்த சென்ட் பாட்டில் ஒன்றையும் கொடுக்கிறான்.

பிறகு உங்களுக்கு எப்படி எனக்கு இந்த செண்டு தான் பிடிக்கும் என்று தெரியும் என்று கேட்டதற்கு பிரியா தான் இதனை கூறினால் என்று கூறிவிட்டு அவன் அந்த இடத்தை விட்டு செல்கிறான் கோபத்துடன் காவியா ரோசை தூக்கி எறிகிறான் பிறகு பிரியா ஜீவாவின் டிரெஸ்ஸை அயன் செய்து வைத்திருக்கிறார்.

நீங்க எதுக்கு அயன் பண்ணிங்க நானே பாத்துக்கிறேன் எனக்கு அந்த பழக்கம் கிடையாது என்று ஜீவா கூற பரவாயில்லை கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு சிலதை மாற்றிக்கொள்ள வேண்டும் எங்கள் வீட்டில் இருக்கும்பொழுது எனது அப்பாவிற்கு நான் தான் அயன் செய்து தருவேன் என்று கூறுகிறாள். இவ்வாறு பிரியா மற்றும் பார்த்திபன் இருவரும் கிடைத்த வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாலும் ஜீவா மற்றும் காவியா இருவரும் தங்கள் காதலை நினைத்து மனதில் போட்டு புழுங்கி வருகிறார்கள்.

Leave a Comment