பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்.! இவரை எப்படி தேடி கண்டுபிடித்து எடுத்தாங்க..

திரையுலகில் பல வெற்றிகளை குவித்த இயக்குனர்கள் எப்பொழுதும் திரையுலகில் இருப்பது போலவே தெரியாது. அவர்கள் தனது படைப்பின் மூலமாகவே பேசுவார்கள் அந்தவகையில் 90 காலகட்டங்களில் இருந்த பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களை முதன்மையானவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் மணிரத்தினம்.

ஒரு சில இயக்குனர்கள் காலங்கள் முன்னேறி போகப்போக படத்தை இயக்குவதை கைவிடுகின்றனர் ஆனால் மணிரத்னம் மட்டும் தன்னை படிப்படியாக இன்னும் வளர்த்துக் கொண்டே இருக்கிறார் இப்பொழுதைய காலத்திற்கு ஏற்றவாறும் படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்திக்கொள்கிறார்.

மேலும் மிகப்பெரிய பட்ஜெட் படமான பொன்னியின் செல்வன் படத்தை 800 கோடி பொருட்செலவில் எடுத்து வருகிறார் இது இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதால்  படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முதல் பாகம் தாய்லாந்து மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி எடுக்கப்பட்டு வருகிறது.

படம் கிட்டத்தட்ட 70% முழுமையடைந்த உள்ளதால் படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்பொழுது கொரோன்னா தொற்று பரவி வருவதால் படம் தள்ளிப் போகும்படி அமைந்தால் படம் வெளியாவது கேள்விக்குறிதான் என்பதை சமீபத்தில் அந்த படத்தில் நடித்த பிரபல நடிகர் கார்த்தி சுல்தான் படத்தின்  பேட்டியின்போது இதை குறிப்பிட்டார்.

இந்த படத்தில் டாப் நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் இந்த படத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் நடித்த பிரபலம் ஒருவரும் இந்த படத்தில் நடிக்கிறாராம் அவர் வேறு யாருமல்ல விஜய் டிவி தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான ஆயுத எழுத்து என்ற சீரியலில் முதலில் நடித்த ஹீரோ “அம்சாத் கான்” தான்.

இப்படத்தில் தற்பொழுது கமிட்டாகி நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு சின்ன ரோலில் நடித்தாலும் வைட்டானாதாக இருக்கும் எனவும் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version