கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து பிரம்மாண்ட திரைப்படத்தை கைப்பற்றிய விஜய் டிவி நிறுவனம்.!

பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாகுபலி இந்த திரைப்படம் தமிழில் வெளியான பொழுது வசூலில் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்று விட்டது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜமௌலிக்கு ரசிகர்கள் பலரும் அப்பொழுது பல பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்ததால் இயக்குனர் ராஜமௌலி இந்த திரைப்படதின் இரண்டாம் பாகத்தை எடுத்து அதிலும் வெற்றி கண்டார் என்பது குறிப்பிடதக்கது பொதுவாகவே ராஜமௌலி இயக்கி வரும் திரைப்படங்கள் அனைத்தும் பல கோடி பட்ஜெட்டில் தான் உருவாகி வருகிறது.

அந்த வகையில் ராஜமௌலி தற்பொழுது RRR என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி,அலியா பட் போன்ற முக்கிய பிரபலங்கள் இதில் நடித்து வருகிறார்கள்.

தமிழ்,தெலுங்கு,இந்தி,கன்னடம்,மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது தமிழ் தொலைக்காட்சி உரிமத்தை பிரபல விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாம் மேலும் இந்த திரைப்படத்தை இரண்டு OTT  நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

RRR 3
RRR 3

ஆம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மொழிகளுக்கு ஜீ5 நிறுவனம் மற்றும் இந்தி மொழிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி நாளுக்கு நாள் அதிகமாக தகவல் வெளியாகுவது இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment