தனது அப்பா-அம்மா கனவுக்காக மிகப்பெரிய வீட்டை வாங்கி சப்ளை செய்த பிக்பாஸ் பிரபலம்.!

தமிழ் சினிமாவின் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அது பெரிதாக பிரபலத்தை தராத காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் கூட பெரிதாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். தமிழில் வெளிவந்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காமெடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவருர்ந்தார். இவர் பெரும்பாலும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு சில காலங்கள் கழித்து தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து தொடர்ந்த சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு மிகப்பெரிய ஒரு விபத்து ஏற்பட்டு அதில் அதிர்ஷ்டவசமாக யாஷிகா ஆனந்த் தப்பித்தார் ஆனால் அவருடைய தோழி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவ்வாறு ஒரு பிரேக்கிற்கு பிறகு சமீப காலங்களாக மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.

yashika ananth

மேலும் சோஷல்மீடியோககளில் தனது புகைப்படங்களை வெளியிட்டு இதன் மூலம் சம்பாதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலை தற்போது இவருடைய அம்மாவுக்கு மிகப் பெரிய சப்ரைஸ்  ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது இவர் சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளாராம் தனது அப்பா அம்மா கனவை சின்ன வயதிலேயே நிறைவேற்றி இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். எனவே ரசிகர்களை இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version