நேசமணி கேரக்டரில் சக போட்டியாளர்களை கண்கலங்க வைத்த தனலட்சுமி.! இருந்தாலும் பொறாமை குறையவில்லை..

விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி இன்றோடு 60 நாளை எட்டியுள்ள நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது 8 பேர் வெளியாகி 13 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் நாள் தோறும் சுவாரஸ்யமான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் மாரி நடித்து, நடனமாடி காமிக்க வேண்டும்.

மேலும் யார் சிறப்பாக நடனமாடி காமெடி செய்கிறார்களோ அவர்களுக்கு சக போட்டியாளர்களால் ஊதியம் வழங்கப்படும். அந்த வகையில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் வக்கீல் கணேசன் என்ற கேரக்டரில் அசிம் விளையாடி வரும் நிலையில் சிரித்துக்கொண்டே வாதாடும் டாஸ்க் என்று கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து 2வது புரோமோவில் தனலட்சுமி கதறி அழும்படி இடம்பெற்றுள்ளது.

அதனை பார்க்கும் பொழுது ஹவுஸ்மேட்ஸ் கலங்கி அமர்ந்திருக்கிறார்கள். அதாவது நேசமணி கெட்டப்பில் மோசமான இந்த வாரம் டாஸ்கி தனலட்சுமி விளையாடி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தனலட்சுமிக்கு எமோஷனலான டாஸ் கொடுக்கப்பட்டது அதாவது சீட்டு கம்பெனியில் பணம் கொடுத்து ஏமாந்ததால் அடுத்த வாரம் நடக்க இருந்த தனலட்சுமி என் மகள் திருமணம் தடை படுகிறது எனவே அதனை நினைத்து அழ வேண்டும் என மணிகண்டா டாஸ் புக்கை படித்துக் காண்பிக்கிறார்.

இதனை கேட்டவுடன் அப்படியே கதாபாத்திரமாக மாறிய தனலட்சுமி சீட்டு கம்பெனியில் பணம் போட்டு ஏமாற்றியவர்களின் என மேடையில் நடித்த அசத்தி காமித்துள்ளார். அப்பொழுது ஐயோ என் பணமெல்லாம் போச்சே என் பொண்ணோட கல்யாணத்தை எப்படி நடத்துவேன் என கதறி அழுவது ஹவுஸ் மேட்ஸ்களையே கண்கலங்க வைத்திருக்கிறது.

இவ்வாறு டாஸ்க்காக இருந்தாலும் ரியலாகவே இவர் இவ்வாறு நடித்த நிலையில் மணிகண்டா மிகவும் வெறித்தனமாக டான்ஸ் ஆடி நிலையில் அதனைப் பார்த்து அசிம் 15000 அன்பளிப்பு தருகிறார். எனவே இதனை பார்த்து பொறாமை பட்ட தனலட்சுமி இது திறமைக்காக தரப்படவில்லை குரூப்பிசம் என ஜனனி ரட்சிதாவிடம் புலம்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் தனலட்சுமிக்கு அதிகமாக ஊதியம் கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக சண்டை போடுவார்.

Leave a Comment