ஹேமா எடுத்த அதிரடி முடிவால் பயங்கரமாக கோபமடைந்த வெண்பா.! இனிவரும் எபிசோட்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து டிஆர்பி-யில் தொடர்ந்தும் முன்னணி வகித்து வந்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஒரு விஷயத்தை மட்டும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் தற்போது டிஆர்பி-யில் கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியல் எப்பொழுது முடியும் என ரசிகர்கள் காத்து வருகிறார்கள். ஆனால் இந்த சீரியலின் இயக்குனர் தொடர்ந்து சில திருப்பங்களுடன் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். எட்டு வருடங்களுக்கு முன்பு பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் 2 பெண் குழந்தைகள் பிறந்தது ஆனால் இது பாரதிக்கு தெரியாத காரணத்தினால் சௌந்தர்யா ஒரு பெண் குழந்தையை தனது வீட்டிற்கு கொண்டு சென்று பாரதியிடம் அனாதை ஆசிரமத்தில் இருந்து பெற்று வந்தோம் என கூறி எட்டு வருடங்களாக வளர்த்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது பாரதியின் கார் ரிப்பேராகி பாதியிலேயே நிற்கும் பொழுது கதவை ஒழுங்காக மூடாமல் அப்படியே விட்டுவிட்டு தனது காரின் முன் நின்று இன்ஜின்களை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது திருடன் ஒருவன் பாரதியின் காருக்குள் இருக்கும் போன் மற்றும் பணத்தை திருட முயற்சித்தான் அதனை எதர்ச்சியாக பார்த்த கண்ணம்மா அவனை துரத்தி சென்று பாரதியின் போனை வாங்கினாள். அவ்வபொழுது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் திருடனிடம் சண்டை போடும்போது திருடன் பாரதியை கத்தியால் குத்த சென்றான் ஆனால் கண்ணம்மா அந்த கத்தி குத்தை வாங்கி கொண்டு மயங்கி விழுந்து விட்டாள். பிறகு பாரதி பதறிப்போய் தனது மனைவி  கண்ணம்மாவை  ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றான் தற்பொழுது கண்ணம்மா ஓரளவிற்கு சரியாகி உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் ஏற்கனவே ஹேமா தனது அப்பாவிற்கு ஒரு வாழ்க்கை துணையை அமைத்து தர வேண்டும் என்று எண்ணத்தில் இருந்து வந்தாள் தற்போது கண்ணம்மா இவ்வாறு தனது அப்பாவை காப்பாற்றியதால் ஹேமா கண்ணம்மா மற்றும் பாரதியை சேர்த்து வைக்க நினைக்கிறாள்.

இவ்வாறு ஹேமா மற்றும் லக்ஷ்மி இவர்கள் இருவரும் இணைந்து கண்ணம்மா மற்றும் பாரதியை சேர்த்து வைப்பார்கள் என்று அப்பொழுதே சௌந்தர்யா திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் வெண்பா ஹேமாவிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வது போல் நடித்து வந்தாள் ஆனால் ஹேமா மாறாமல் தற்பொழுது கண்ணம்மாவும் பாரதியும் தான் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருவதால் இதற்குமேல் மறுபடியும் வெண்பா ஹேமாவிடம் மிகவும் வெறுப்பாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment