குடித்துவிட்டு தப்பு செய்ததால் கதறி அழுவும் வெண்பா.! கல்யாணத்தை நிறுத்த இவ்வளவு அல்பமாவா யோசிப்பது..

விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா.ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் பயங்கரவில்லையாக இருந்து வந்த வில்லி வெண்பாவின் ஆட்டத்தை அடக்குவதற்கு சௌந்தர்யா ரோஹித்து உடன் நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளார்.

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் ஹோட்டலில் தங்கிய வெண்பா அங்கு அவருடன் கண்முன் கொடுத்துக்  கொண்டிருந்த ரோகித்துடன் சேர்ந்து குடிக்கிறார் போதையில் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து விடுகின்றனர்.தப்பு செய்துவிட்டோம் என்பதை வெண்பாவிற்கு தருகிறது மேலும் வெண்பா தாங்கிக்கொள்ள முடியாமல் பைத்தியம் பிடித்தது போல் கத்துகிறார்.

அங்கு இருக்கும் வேலைக்காரி சாந்தியை சந்தித்து நடந்ததை கூறி அழுகிறார் இவ்வாறு நடந்த சம்பவத்தை காரணமாக வைத்துக் கொண்டு ரோகித் தன்னிடம் தவறாக நடந்ததாக சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு சதி திட்டம் தீட்டுகிறார் மேலும் மறுபடியும் பாரதியை சுற்றி சுற்றி வர போகிறார். இவ்வாறு ஒரு கட்டத்தில் வெண்பா கற்பமாக இருக்க அது பாரதியின் குழந்தை என கூற இருக்கிறார்.

இப்படிப்பட்டநிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் கதை மாறப்போவதால் சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் கோபத்தில் கழுவி ஊற்றி வருகிறார்கள் தனக்குப் பிறந்த இரண்டு மகள்களை வேறு ஒருவருக்கு பிறந்ததாக நினைத்து சந்தேக புத்தியுடன் இருந்து வரும் டாக்டர் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்க முடியாத முட்டாள் மருத்துவராக இருந்து வருகிறார் என்பது ரசிகர்களை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்குகிறது.

எனவே சீரியல் பார்ப்பவர்களை முட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கிறார் பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர். மேலும் கண்டிப்பாக பாரதி தான் என் குழந்தையின் அப்பா என வெண்பா இன்னும் பல சதி திட்டங்கள் தீட்டுவார் அதில் எந்த குழப்பமும் இல்லை ஆனால் அடுத்தது கண்ணம்மா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்தே பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment