பாரதிக்காக கத்திக்குத்து வாங்கிய கண்ணம்மா.! இனிதான் இருக்கு ஆட்டமே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று டாப் சீரியல்களில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருப்பது தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தது ஆனால் இந்த கதையை சவ்வு போல் இழுத்து கொண்டே போவதால் தற்போது 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இயக்குனர் கதையை மாற்றலாம் என்று சரியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தற்பொழுது லக்ஷ்மிக்கு தனது அப்பா யார் என்பதை கூறுவதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறாள் கண்ணம்மா. இன்னொரு பக்கம் வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஹேமாவிடம் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் பாரதி காரில் வெளியில் செல்கிறான் போகும் வழியில் கார் பிரேக் டவுன்னாகி விட்டது எனவே கீழிறங்கி பாரதி காரை பார்த்துக் கொண்டிருக்கிறான். எதிர்பாராதவிதமாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு கண்ணம்மா ரோட்டில் நடந்து வருகிறாள். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாரதியின் காரை திறந்து போனை  திருடுகிறான்.

அதனைப் பார்த்த கண்ணம்மா ஓடிச்சென்று தனது கூடையில் இருந்த ஒரு கையால் திருடனின் தலையில் அடிக்க திருடன் கீழே விழுந்து விடுகிறான். பிறகு பாரதி கண்ணம்மா இருவரும் சேர்ந்து போனை வாங்க செல்கிறார்கள் அப்போது கத்தியை வைத்து விரட்டுகிறான். பிறகு பாரதியை குத்த முயற்சிக்கின்றான் திருடன் ஆனால் கண்ணம்மா தனது கணவர் மீது கத்தி படக்கூடாது என்பதற்காக அந்த கத்தி குத்தை தானே வாங்கி கொண்டாள்.

பிறகு கண்ணம்மா மயக்கம் போட்டு கீழே விழ பாரதி தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறான். இந்த வாரம் முழுவதும் இதனை வைத்துதான் எபிசோடுகள் அனைத்தும் ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment