கொலை செய்யும் அளவிற்கு தயாரான வெண்பா.! இனிமேல் நடக்கப் போவது என்ன.?

விஜய் டிவியின் பல எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணாமா  எட்டு வருடங்களாக பிரிந்து இருக்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் வெண்பா மிகவும் கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறார்.இந்நிலையில் பாரதியை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக பாரதியின் மகள் ஹேமாவை தனது கைக்குள் வளைத்து போடுவதற்கு திட்டமிடுகிறார்.

ஆனால், இதற்கு ஹேமா சிறிதும் ஒத்துக் கொள்ளாததால் கோபத்தின் உச்சகட்ட நிலையில் தனது வீட்டில் வேலை செய்து வரும் சாந்தியிடம் பாரதிகண்ணம்மாவை எப்படி பிரித்தேன் என்றும் பாரதிக்கு உடலில் எதுவும் பிரச்சனை இல்லை என்றும் வேலைக்காரியிடம் விலாவாரியாக கூறுகிறார்

இதை வெண்பாவின் கூட்டாளியான மாயாண்டி எதிரியும் கூட இதனை அனைத்தும் வீடியோ எடுத்து இந்த வீடியோவை பாரதி மற்றும் கண்ணம்மா விடம் காட்டக்கூடாது என்றால் எனக்கு பணம் கொடுக்கவேண்டுமென்று வெண்பாவை மிரட்டுகிறார்.

பிறகு மாயாண்டி கேட்பதைக் கொடுத்து வருகிறாள் வெண்பா. பாரதிகண்ணம்மா இருவருக்கும் இந்த வீடியோவை அனுப்பினால் தனது உண்மை தெரிந்து விடும் என்பதை உணர்ந்து மாயாண்டியை கொள்வதற்காக துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கோபத்துடன் செல்கிறாள்.

ஆனால், வெண்பாவை சாந்தி தடுத்து நிறுத்தி ஏற்கனவே குற்ற வழக்கில் உங்கள் பெயர் இருக்கிறது மறுபடியும் ஒரு கொலை செய்தால் வாழ்நாள் முழுதும் ஜெயில் தான் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறாள் வெண்பாவும் நிதானமாக யோசித்து மாயாண்டியை வேற வழியில் தான் தீர்த்துக் கட்ட முடியும் என்று முடிவெடுக்கிறாள்.ஒருவகையில் கண்ணம்மா விற்க சொந்தக்காரரான மாயாண்டி குடிபோதையில் இதையெல்லாம் உணரவும் வாய்ப்பிருக்கிறது.

Leave a Comment