வெண்பாவின் விபரீத முடிவு.!பதற்றமடைந்த ரசிகர்கள்.

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான கதை அம்சம் உள்ள புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒரு சில சீரியல் டிஆர்பி-யை அடித்து நொறுக்கி வருகிறது அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை அறிமுகப்படுத்தும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி.

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து சுவாரசியமாக ரசிகர்கள் விரும்பும் வகையில் கதையம்சம் உள்ள சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பல தகவல்கள் மிகவும் சஸ்பென்ஸாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தன் மீது சந்தேகப்பட்டதன் காரணமாக வீட்டை விட்டு சென்ற கண்ணம்மா எட்டு வருடங்கள் கழித்து தற்பொழுது பாரதியுடன் ஒரே வீட்டில் இருந்து வருகிறார்.  பாரதி கண்ணம்மாவிடம் டிவோஸ் கேட்டுள்ள நிலையில் கோர்ட் ஆறு மாத காலங்கள் ஒன்றாக வாழ உத்தரவு போட்டுள்ளது.

எனவே ஒரே வீட்டில் இருந்து வரும் இவர்கள் ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் பாரதி போட்ட ஒரே கண்டிஷன் ஆனால் தற்போது அனைத்தும் கனவாகி உள்ளது. அதாவது பாரதி நான் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் நீ செய்த தவறை ஒத்துக்கொள் என கண்ணம்மாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால் கேட்டதற்கு எல்லாம் கண்ணம்மா நன்றி கூறிவிட்டு வீட்டை விட்டு அவள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வெண்பா  பாரதியின் பிரிவை தாங்க முடியாமலும், பாரதி தன்னுடன் சரியாக பேசவில்லை என்பதற்காகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிய வெண்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

இதனை பாரதிக்கு தெரியபடுத்த வெண்பா செய்வது பிளானாக இருந்தாலும் முட்டாள்தனமாக பாரதி வெண்பாவை மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment