எனது அப்பாவிற்கு எதிராக மாறிய லக்ஷ்மி.! இனி வரும் எபிசோடுகள்.

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா.

இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி முன்னணி வகித்து வந்த நிலையில் சமீப காலங்களாக பின்னுக்கு தள்ளி உள்ளது எனவே தற்போது இந்த சீரியல் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும் என்பதற்காக இந்த சீரியலின் இயக்குநர் பல திருப்பங்களுடன் அதிரடியான காட்சிகளை ஒளிபரப்பி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது லட்சுமி எப்படியோ தனது அப்பா யார் என்று என்பதை அறிந்து கொண்டு முதன்முறையாக தனது அம்மா அப்பா தங்கை ஆகியவர்களுடன் பள்ளிக்கூடத்தில் நடைபெற்று வரும் சுற்றுலாப் பயணத்திற்கு சென்றுள்ளார்கள்.அங்கு நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருக்கும் பொழுது லக்ஷ்மி நீரில் மூழ்கி விடுகிறார் பாரதி பதட்டத்துடன் சென்றேன் லக்ஷ்மியை  காப்பாற்றி விடுகிறான்.

பிறகு பாரதிக்கு கண்ணம்மா நன்றி கூறுகிறாள்.டூர் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் லக்ஷ்மி நன்றாக தூங்கி விடுகிறாள் எனவே பாரதி கண்ணம்மா மற்றும் லட்சுமியை தனது காரில் அழைத்து சென்று அவர்களில் வீட்டில் விட்டு விடுவதாக கூறுகிறான். இவ்வாறு காரில் தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வருவதை பார்த்து வருகிறாள். பாரதி கண்ணம்மா இருவரும் இதற்கு மேல் எப்படி சந்தோஷமாக வாழ முடியுமா என்பதை இருவரும் நினைத்து மிகவும் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருமணமான புதிதில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேண்டும் என்றும் அவ்வாறு குடும்பத்துடன் 4 பேரும் இணைந்து சுற்றுலா சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்ப வேண்டும் என்றும் பேசி இருந்ததை கண்ணம்மா நினைத்துப் பார்க்கிறாள் அதனை பாரதியிடம் மனம் திறந்து கூறுகிறாள்.

இவ்வாறு நினைத்து பார்த்து கண்ணம்மா நாம் நினைத்தபடி நடந்தாலும் சந்தோசம் ஒன்று மட்டும் மிஸ்சாகின்றது என்று நினைக்கிறாள். இப்படிப்பட்ட நிலையில் தனது அம்மா அப்பா தங்கை போன்றவர்களை பற்றி தெரிந்து கொண்ட லட்சுமி விரைவில் அம்மா அப்பா இருவரும் ஏன் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உள்ளார்.

கண்ணம்மாவை பாரதி சந்தேகப்பட்டதால் தான் இப்படிப் பிரிந்து இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதும் லட்சுமி தனது அப்பாவிற்கு எதிராக தனது அம்மாவின் நியாயத்தை கண்டுப்பிடித்து தீர்வு காணுவாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment