ஒரே கதையை 40 எபிசோடுகளாக ஓட்டி வரும் விஜய் டிவி.! கடுப்பில் ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகிக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.  இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 8 வருடங்களாக தனது அப்பா யார் என்று தெரியாமல் வளர்ந்து வரும் கண்ணம்மாவின் மகள் லட்சுமிக்கு தனது பிறந்த நாளன்று உன்னுடைய அப்பாவை அறிமுகப்படுத்துகிறேன் என கண்ணம்மா வாக்கு கொடுத்துள்ளார்.

எனவே எப்படியாவது பாரதியை கண்ணம்மாவின் வீட்டிற்கு அழைத்து சென்று விட வேண்டும் என்பதற்காக கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா இருவரும் சேர்ந்து பல விஷயங்களை செய்து வருகிறார்கள். பாரதி இங்கிருந்தால் எப்படியாவது கண்ணம்மாவின் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார்கள் என்ற எண்ணத்தில் ஹைதராபாத் செல்ல முடிவெடுத்து இருந்தார்.

ஹைதராபாத் செல்வதற்கு ஹேமாவயும் தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக 2 விக்கெட்களை புக் செய்த பாரதி அதனைப் ஹேமாவிடம் கூற ஹேமா சமையல் அம்மாவின் பிறந்த நாளுக்கு செல்ல வேண்டும் அது முடிந்தவுடன் ஹைதராபாத் போகலாம் என கூறி மறுத்துவிட்டாள்.

இப்படிப்பட்ட நிலையில் வெண்பா பாரதியை நேரில் சந்திக்க மேலும் வெண்பா பாரதியை உசுப்பேற்றுவது போல் பேசி வருகிறாள்.  அதாவது கண்ணம்மாவின் வீட்டிற்கு போய் அசிங்கப்பட போகிறாயா என பாரதியை கேட்கிறாள். இதன் மூலம் கடுப்பான பாரதி தனது மகள் ஹேமாவின் பேச்சை கேட்காமல் மிகவும் கோபமாக நடந்து கொள்கிறான்.

இப்படிப்பட்ட நிலையில் லட்சுமி தனது அப்பாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். பிறகு பாரதி வெண்பாவையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறான் மேலும் கண்ணமா கடுப்பாகிறாள். அதன் பிறகு பாரதியின் அப்பா அனைத்து உண்மைகளையும் லக்ஷ்மியிடம் போட்டு உடைக்க குழந்தையின் மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காக பாரதி அமைதியாக இருக்கிறான். இவ்வாறு கண்ணம்மாவின் பிறந்தநாளை வைத்து கிட்டத்தட்ட 40 எபிசோடுகளை ஓட்டி விடுவார்கள் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment