பாரதி கண்ணம்மா அஞ்சலி போட்ட டுவிட்டால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் தொடர்ந்து டாப் 5 இடத்தை பிடித்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்த சீரியல் பாரதி கண்ணம்மா.

ஆனால் சில காலங்களாக இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு நல்ல வரவேற்பை பெறவில்லை தற்பொழுது டிஆர்பி யில் முன்னணி வகிக்கும் சீரியல்களில் இருந்து வெளியேறி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த சீரியலின் இயக்குனரும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார் எனவே இதற்குக்மேல் ஏதாவது இந்த சீரியலில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் முதலில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ரோஷினி தனது அடுத்தகட்ட முன்னேற்றத்திற்காக இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். தற்பொழுது இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தற்போது ரோஷினி நடித்து வந்த கண்ணம்மா கேரக்டரில் வினுஷா தேவி என்ற நடிகை ரோஷினி போலவே இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி ஆரம்ப காலகட்டத்தில் கண்ணனுக்கு எதிரியாக நடித்து வந்தாலும் கர்ப்பமானதற்கு பிறகு கண்ணம்மாவுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் மிகவும் அன்பாக இருந்து வந்தாள்.  இப்படிப்பட்ட நிலையில் கண்மணியும் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் குயின் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் ரசிகருக்கு புரியாத வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை  போட்டுள்ளார்.

அதாவது தப்பான நாட்களுக்காக ஒருபோதும் வேலை செய்யாதீர்கள் குறிப்பிட்ட பின்னணியில் பாரதி கண்ணம்மாவின் நீ என்னும் தொடங்கும் பாடலை இணைத்துள்ளார். எனவே இதனைப் பற்றிய தெளிவான பதிலை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஆனால் இதனை குறித்து இன்னும் சரியாக எந்த தகவலையும் கண்மணி தரவில்லை.

Leave a Comment