பாரதியை குடிகாரன் என அசிங்கமாக திட்டிய வெண்பா.! மறைந்து நின்று கேட்ட ஹேமா.! இதுக்கு பேரு தான் தவளை தன் வாயாலயே கெடுத்துகிறதோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் முக்கியமாக  பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சின்னத்திரை சீரியல்களில் முன்னணி வகித்து வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. சில காலங்களாக இந்த சீரியல் ரசிகர்களால் பெரிதும் கலாய்க்கப்பட்டு வந்ததால் தற்போது கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

அதாவது தனது அப்பா தனியாக மிகவும் கஷ்டப்படுகிறார் என்ற எண்ணத்தில் ஹேமா பாரதிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறாள். அதோடு வெண்பாவும் ஹேமாவின் மீது மிகவும் அன்பாக இருப்பது போலவும் அவளுக்காக சமைத்து ஸ்கூல்க்கு எடுத்து சென்று கொடுத்து வருகிறாள் எனவே ஹேமாவும் வெண்பாவின் சதித்திட்டங்களை புரிந்து கொள்ளாமல் வெண்பா விடம் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறாள்.

இந்நிலையில் வெண்பா வேலைக்காரி சாந்தியிடம்  பாரதியைப் பற்றி கூறும் பொழுது அதனை மாயாண்டி கேட்டுவிட்டு ரெக்கார்ட் செய்து விடுகிறான்.  பிறகு பாரதியிடம் காட்டி விடுவேன் என்று மிரட்டி பணம் கேட்கிறான். எனவே வெண்பா தற்பொழுது மாயாண்டியின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறாள்.

இப்படிப்பட்ட நிலையில் பாரதியை குடிகாரன் என வெண்பா திட்ட அதனை கேட்டு பாரதி ஆத்திரமடைந்த பேசுகிறான். இதனை மறைந்து நின்று ஹேமா கேடி விடுகிறாள். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சௌந்தர்யா ஹேமாவிடம் வெண்பாவை பற்றி தப்பாக பேசி இதற்கு பாரதி திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து விடலாம் என கூறுகிறாள்.

இவ்வாறு வெண்பா நினைத்ததையெல்லாம் நடக்க இருந்த நிலையில் அவரின் வாயாலேயே அனைத்தையும் கொடுத்துக் கொண்டாள். இந்நிலையில் இதற்கு மேல் ஹேமா இதைப்பற்றி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

Leave a Comment