ரூமுக்குல் அழைத்து சென்று கோபியை மிரட்டும் மூர்த்தி.! கோபி செய்த காரியதால் கதவை உடைக்கும் குடும்பத்தினர்கள்..

விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் டி ஆர் பி யில் போட்டி போட்டுக்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தை மையப்படுத்தி காட்டுவதால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. இந்த இரண்டு சீரியல்களுக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி வந்தது. தற்போது இந்த இரண்டு சீரியலும் மெகாசங்கமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இரண்டு சீரியல்களும் மெகசங்கமாக நடந்து கொண்டிருப்பதை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். கோபியின் அப்பா பிறந்தநாளுக்காக இணைந்த இந்த இரண்டு குடும்பங்களும் கூட்டுக் குடும்பங்களாக சந்தோஷமாக இருந்தாலும் கோபிக்கு துளியும் விருப்பமில்லை இதில் கண்டிப்பாக கோபி கையும் களவுமாக மாட்டிக் கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இதைத்தொடர்ந்து கோபி அப்பாவின் பிறந்தநாள் அன்று ராதிகா வந்தவுடன் கோபி பல பொய்களை சொல்லி அறைக்குள் சென்று ராதிகா சென்ற உடன் திரும்பி வருகிறார். அதன் பிறகு, ராதிகா மற்றும் கோபி ஆகிய இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். இதை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி பார்த்துவிடுகிறார். இதை பார்த்துவிட்டு தனத்திடம் கூறுகிறார்
தனம்,மூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து ராதிகாவின் கேட்கிறார் ராதிகாவும் கோபியை காட்டி இவரைதான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக கூறுகிறார்.

இதைத்தொடர்ந்து உறுதி செய்த மூர்த்தி கோபியிடம் ராதிகாவை பற்றி கேட்கும்போது கோபி வழக்கமாக மழுப்பி வருகிறார். ஆனால் மூர்த்தி ஆத்திரத்துடன் கோபியை தரக்குறைவாக பேசி வருகிறார். இதைப்பார்த்த கோபி கோபத்துடன் வீடு அதிரும் படியாக பேசுகிறார். இதை குடும்பத்தில் அனைவர்களும் அதிர்ச்சியில் என்ன இந்த சத்தம் என்று பார்க்கிறார்கள்.

அப்போது மூர்த்திக்கும் கோபிக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது பாக்கியா இருவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்கும்பொழுது மூர்த்தி பாக்கியா விடம் கோபி சரி இல்லை என்றும் நீ ரொம்ப அப்பாவி என்றும் கூறிவருகிறார். இதைக்கேட்ட பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளார். இந்த உண்மைகளை பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளார்கள்.

மேலும் இதை தொடர்ந்து கோபி நிலைமை என்ன ஆகப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது இதன்பிறகு, பாக்யாவின் முடிவு என்ன என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment