தந்திரமாக காய் நகர்த்தும் கோபி.! மீண்டும் ரொமன்ஸ்சை ஆரம்பித்த ராதிகா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்பொழுது விஜய் டிவி டிஆர்பி-யில் ஓரளவிற்கு முன்னணியில் இருந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் பாக்கிய லட்சுமி சீரியல் தான்.

அந்த வகையிலும் பாக்கிய லட்சுமி சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஏராளமான காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட 25 வருடங்களாக தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த கோபி தனது முன்னாள் காதலியை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக பாக்கியா விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம்.

அந்த வகையில் தற்பொழுது ராதிகாவுடன் வாழ்வதற்காக சில திட்டங்களை செய்து வருகிறான். இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த கோபி தற்பொழுது எழில் மற்றும் கோபியின் அப்பா ஆகியோர் மிகவும் கோபமாக கோபியை எச்சரித்து வருவதால் இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் வேலைக்காகாது என்பதற்காக வேலையை தொடங்கிவிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கோபியின் அப்பா கோபியை கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்துள்ளார் இவரை தொடர்ந்து எழிலின் முதல் திரைப்படம்  ரிலீஸ்சான நிலையில் அதற்கு தனது குடும்பத்தையே வைத்துக்கொண்டு தியேட்டரில் பார்க்க வைத்தான் ஆனால் தன் அப்பாவை நேரில் பார்த்து நீங்கள் மட்டும் வரவே வராதீங்க என்று கையெழுத்து கும்பிட்டான்.

எனவே எழில் சொன்னதால் கோபி உடனே மனம் கஷ்டம் ஏற்பட்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறான். சோகமாக இருப்பதை அறிந்த ராதிகா ஏன் இப்படி சோகமா இருக்கீங்க என்று கோபியிடம் கேட்க இவ்வளவு நாள் தனது உழைப்பை சுரண்டி தின்ன குடும்பம் தற்போது நன்றி கெட்டவர்களாக நடந்துகொள்கிறார்கள் இவ்வாறு தனது மீது தப்பே இல்லாததுபோல் பாக்கியாவை குறை சொல்லி திட்டுகிறான்.

இதனைக் கேட்டு கொண்ட ராதிகா இன்னும் விவாகரத்து வாங்க ஆறுமாதம் இருக்கிறது எனவே அதுவரை அங்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை இப்பொழுது எங்களுடன் வந்து விடுங்கள் என்று கூறுகிறார். எனவே அதனை சாதகமாக எடுத்துக் கொண்ட  கோபி கொஞ்சம் துணிச்சலாக பாக்யாவை பிரிய சில முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் ராதிகாவிற்கு கோபி மனைவி பாக்கியா என்பது தெரியாது அப்படி தெரியவந்தால் இதற்கு மேல் பாக்கியாவிற்கு எதிரியாக ராதிகா இருப்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment