இளம் காதல் ஜோடிகளையே ஓரம்கட்டிய கோபி.! வச்சு செய்யும் நெட்டிசன்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி சீரியலாக வந்து அமோக வெற்றியை பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் முழுவதும் வீட்டில் இல்லத்தரசிகளை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் மனைவி பாக்கியாவை நிரந்தரமாக பிரிந்து டிவோர்ஸ் வாங்கிவிட்டு தனது முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கோபி பல திட்டங்களை தீட்டி வருகிறார். முட்டாள் பாக்கியா கோபி செய்யும் தவறுகளை உணராமல் கோபி எது சொன்னாலும் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறாள்.

இதனை மிகவும் நன்றாக பயன்படுத்திக் கொண்ட கோபி குடும்பத்தில்  உள்ளவர்களையும் சரியாக பார்த்துக் கொள்ளாமல் இருந்து வருகிறான். அந்த வகையில் தற்பொழுது வீட்டில் பணப் பிரச்சனையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. பாக்கியா மாற்றம் கோபி இருவருக்கும் விவாகரத்து ஆனதால் ராதிகாவும் அவர் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டார்.

பாக்யலக்ஷ்மி வீட்டில் பண கஷ்டம் அதிகமாக இருப்பதால் வீட்டு வேலை மற்றும் சம்பாதிப்பது என்று தொடர்ந்து ஏராளமான வேலைகளை செய்து வருகிறார். பாக்யலக்ஷ்மி மிகவும் கஷ்டப்பட்டு வந்தாலும் இதனை பற்றி கவலைப்படாமல் ராதிகாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான் கோபி.

இதனைப் பார்த்த ரசிகர்கள் கோபியை கண்டபடி திட்டி வருகிறார்கள். இவ்வாறு மூன்று பிள்ளைகள் இருக்கும் பொழுதும் அந்த கோபிக்கு இதெல்லாம் தேவைதானா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment