கட்டுன பொண்டாட்டிக்கு துரோகம் செய்துவிட்டு அடுத்த கல்யாணத்துக்கு ரெடியான கோபி.! விறுவிறுப்பாகும் பாக்கியலக்ஷ்மி சீரியல்

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்ற தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்தும் முன்னணி வகித்து வரும் சீரியல் பாக்கியலட்சுமி இந்த சீரியல் முழுவதும் குடும்பத்தலைவியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் குடும்ப இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.

மிகவும் விறுவிறுப்பாகவும் பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்பொழுது பாக்கியாவை கோபி விவாகரத்து செய்ய துணிந்து விட்டார் விவாகரத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு கையெழுத்து பாக்கியம் கேட்டவுடன் என்னவென்று தெரியாமல் உடனே வாங்கி கையெழுத்து போட்டு விடுகிறாள்.

இவ்வாறு முழுமையாக கணவரை நம்பும் பாக்கியா கண்மூடித்தனமாக தனது கணவரை நம்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் கையெழுத்து போட்டவுடன் கோபி எதற்காக கையெழுத்து போட வேண்டும் என்பதை ஏன் கேட்கவில்லை என கூற உடனே வாக்கியா நீங்கள் எது செய்தாலும் என் நன்மைக்காகத் தான் இருக்கும்  என்று கூறுகிறாள்.  அதற்காக குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறான் கோபி.

எப்படியோ இவ்வளவு எளிதாக நமது வேலை முடிந்துவிட்டது என பிறகு கோபி மகிழ்ச்சி அடைகிறான்.  இவர்களின் இரண்டாவது திருமணத்தை பற்றி எழிலுக்கு தெரியாது அப்படி தெரிந்தால் கூட நிறுத்த முயற்சி செய்வான் ஆனால் ராதிகா மற்றும் கோபி அவர்களின் திருமணத்தை பற்றி கோபியின் அப்பாவிற்கு மட்டுமே தெரியும்.

அதனை அவர் சொல்ல முயற்சி செய்தாலும் அவரால் முடியவில்லை. கோபியை பார்த்தாலே அவர் மிகவும் உணர்ச்சி படுவதால் கோபியின் மீது பாகிக்யா மற்றும் அவரின் அம்மாவிற்கு சந்தேகம் வருகிறது.  இப்படிப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் கோபி மற்றும் ராதிகாவிற்கு இரண்டாவது திருமணம் நடக்க உள்ளது.

பிறகு ராதிகா மற்றும் கோபி ஒரே வீட்டில் வாழ உள்ளார்கள். இதனை அறிந்ததும் பாக்கியா எனக்கு துரோகம் செய்த கோபியை சாகும்வரை மன்னிக்கப் போவதில்லை என்ற முடிவுடன் தனது மாமனார், மாமியார், பிள்ளைகள் ஆகியோருடன் தனியாக வாழ போகிறாள் இனிவரும் நாளில் இந்த எபிசோடுகள் தான் ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment