ஐந்து கல்யாணத்திற்கு சமைப்பதற்கான போட்டியில் கலந்து கொண்ட பாக்யா.! எதிர்க்கும் தொழிலதிபர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்போது தன்னுடைய குடும்பத்தின் செலவை பார்க்க முடியவில்லை பணம் பற்றாக்குறை இருப்பதால் பாக்யா என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் மசாலா பொடி, கேரியர் சாப்பாடு போன்றவற்றை மட்டும் செய்தால் குடும்பத்தின் செலவை பார்க்க முடியாது என்பதற்காக தற்பொழுது திருமண மண்டபத்தில் ஆர்டரை எடுப்பதற்காக இன்டர்வியூ செல்கிறார்.

தன்னம்பிக்கையுடன் பாக்யா அங்கு போன நிலையில் பாக்யாவிற்கு எதிராக ஹோட்டல் தொழில் அதிபர்கள் பலர் உள்ளார்கள் இதனை பார்த்தவுடன் பாக்யாவிற்கு மிகவும் பயம் வந்து விடுகிறது மேலும் அவர்கள் அனைவரும் ஆண்கள் பாக்யா மட்டும் தான் பெண் எனவே பதட்டத்தில் பாக்யா எழிலுக்கு போன் செய்கிறார்.

அதாவது ஒரே நேரத்தில் ஐந்து கல்யாணத்திற்கு சாப்பாடுகளை தயாரிக்க வேண்டும் அதற்கு ஆல் பலமும், பணம் பலமும் மிகவும் முக்கியம். இதனை பாக்யா எப்படி சமாளிப்பார் மேலும் இதனை பற்றி அனைவரும் அங்கு பேசிக் கொள்கிறார்கள். இருப்பினும் அந்த ஆர்டரை பாக்யாவிற்கு தர வாய்ப்பிருக்கிறது ஏனென்றால் அவர் ஏற்கனவே பாக்யாவிற்கு தெரிந்தவர் பாக்யா வீடு வீடாக கேரியர் சாப்பாடு தரும் பொழுது இவருடைய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு மிகவும் நன்றாக இருப்பதாக தன்னுடைய வீட்டில் அழைத்து பாராட்டி உள்ளார்.

மேலும் அந்த நபரின் வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு ஆர்டரையும் சமைத்துக் கொடுத்துள்ளார் இதன் மூலம் நல்ல லாபம் பார்த்துள்ளார் பாக்கியா இப்படிப்பட்ட நிலையில அந்த நபர் பாக்யாவை பார்த்து விட்டால் கண்டிப்பாக இந்த ஆர்டரை தருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும் 15 நிமிடங்களில் மிகவும் சுவையாக ஏதாவது ஒரு உணவை சமைக்க வேண்டும் இந்த போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு தான் அந்த ஆர்டரை தருவார்கள் எனவே கண்டிப்பாக பாக்யா இந்த போட்டியில் ஜெயித்து ஆர்டரை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment