ஏன் நம்ப கல்யாணம் பண்ணிக்க கூடாது என கேட்கும் பாக்கியா? பொண்ணு பார்க்க வரும் பழனிச்சாமி.. இதெல்லாம் கேட்க ஆளே இல்லையா என வாயில் அடித்துக் கொள்ளும் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் ஈஸ்வரி ராதிகாவிற்கு இடையே மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்ட நிலையில் போலீஸ் வரையும் சென்றுள்ளது.

அதாவது ராதிகா கோபி இருவரும் பாக்கியா வீட்டில் தங்கி வரும் நிலையில் இது யாருக்கும் பிடிக்காமல் இருந்து வருகிறது மேலும் எப்படியாவது ராதிகாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்து வருகிறார்கள். இவ்வாறு என்னதான் பிரச்சனை நடந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ராதிகா மிகவும் திமிராக நடந்து கொள்கிறார்.

அந்த வகையில் கிச்சனுக்கு சென்ற ராதிகா இஷ்டத்திற்கு ஆடியதால் இதனை பார்த்து கடுப்பான ஈஸ்வரி விட்டா ஓவரா ஆடிட்டே இருக்கிற எனக் கூறி முடியை பிடித்து வீட்டை விட்டு வெளியில் தள்ளுகிறார். எனவே ராதிகா தனது அம்மாவிடம் நடந்த விஷயத்தை பற்றி கூற இதனை சும்மா விடக்கூடாது என்பதற்காக ராதிகாவின் அம்மா போலீசை அழைத்து வருகிறார்.

இதற்குள் கோபியும் வந்துவிட ராதிகா ரோட்டில் ஓரத்தில் அழுதுக் கொண்டு இருக்கிறார் என கூற பிறகு கோபி நியாயம் கேட்பதற்காக செல்கிறார். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் போலீசை ராதிகாவின் அம்மா அழைத்து வர பாக்யாவதான் இவர் விவாகரத்து செய்து விட்டார்களா அப்பனா இந்த வீட்டில் ராதிகாவிற்கு தான் அனைத்து உரிமையும் என கூறிவிட்டு சென்று விடுகிறார்கள்.

இதனை வைத்துக்கொண்டு ராதிகா மிகவும் திமிராக நடந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மாமா வீட்டு சொந்தக்கார பொண்ணு நாளைக்கு இங்க வராங்க நீங்க பொண்ணு பார்க்க வர வேண்டும் என பழனிசாமியிடம் பாக்கியா போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.

பிறகு சார் எந்த வயசுல வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஏன் சார் நம்ப ஒரு கல்யாணம் பண்ணிக்க கூடாது நீங்க பொண்ணு பார்க்க வரீங்க கல்யாணம் பண்றீங்க போறீங்க என பாக்கியா கூற இதனை எல்லாம் கோபி ஓட்டு கேட்டுவிட்டு வாயில் அடித்துக் கொண்டு இதனை எல்லாம் கேட்க யாரும் இல்லையாடா என புலம்புகிறார்.

காலையில் எழுந்தவுடன் வீட்டிற்கு இருப்பவர்கள் அனைவரும் டெக்ரேஷன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க கோபி இனியாவிடம் என்ன டெகரேஷன்  பண்ணிக்கிட்டு இருக்கீங்க என கேட்க அதற்கு இனியா இன்னைக்கு பழனிச்சாமி அங்கிள் நம்ம வீட்டுக்கு பொண்ணு பார்க்க வராரு என கூறியவுடன் கோபி அதிர்ச்சி அடைகிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.

Leave a Comment