ராதிகா பெயரை கேட்டு நடு நடுங்கிய கோபி.! பங்கமாய் கலாய்த்து தள்ளிய பாக்யா மகன் மற்றும் மருமகள்கள்.! பாக்கியலட்சுமி இன்றைய ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது கோபி தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். அதாவது தற்பொழுது ராதிகா கோபி இருவரும் பாக்கியாவின் வீட்டில் தங்கி வரும் நிலையில் கோபி வேண்டாம் என கூறினாலும் ராதிகா இந்த வீட்டை விட்டு போக கூடாது என்ற முடிவில் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் ராதிகா எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வரும் நிலையில் வீட்டில் எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் ஆபீஸ்சில் பாக்யாவை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அங்கு இருக்கும் கேண்டீன் ஓனர் பாக்யாவிற்கு ஆதரவாக பேச ராதிகாவை கண்டிக்கிறார்.

இவ்வாறு அங்கு நடந்த விஷயங்களை வீட்டில் இருப்பவர்களிடம் கூற ஈஸ்வரி ராதிகாவிடம் கேட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் இந்த நேரத்தில் கோபி வந்ததால் பிறகு நடந்த விஷயங்களை கோபியிடம் கூறுகின்றனர். அதற்கு ராதிகா என்னை அனைவரும் கொடுமைப்படுத்துறாங்க என சொல்ல உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை உன்னால இந்த வீட்ல இருக்குறவங்க எல்லாருடைய நிம்மதியும் போயிடுச்சு எப்போ பார்த்தாலும் சண்டை சண்ட உன்னால முடிஞ்சா இங்க இரு இல்லையென்றால் கிளம்பி என கூறி விடுகிறார்.

எனவே ராதிகாவும் தன்னுடைய வீட்டிற்கு சென்று விட அங்கு அவருடைய அம்மா அப்படியெல்லாம் சாதாரணமாக வந்து விட முடியாது என மீண்டும் கூறிய அனுப்பி வைக்கிறார். இந்த நேரத்தில் ஈஸ்வரி கோபி அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது ஈஸ்வரி அவ வேணாம் விவாகரத்து செய்துவிடு மறுபடியும் பழைய படி வாழலாம் என கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் எழில், பாக்யா, செல்வி, அமிர்தா, இனியா என அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். சிரிப்பு சத்தம் கேட்டு கோபி செல்ல அவர்களிடம் பேச ஆசைப்படுகிறார்.

என்னன்னு சொன்னீங்கனா நானும் சேர்ந்து சிரிப்பல எனக் கூற அனைவரும் ஷாக்கா நின்றனர். பிறகு எழில் அவங்க வந்துட்டாங்க எனக் கூறியதும் யாரு என கேட்கிறார் கோபி. அதற்கு அவங்க தான் ராதிகா என்ன சொன்னவுடன் நான் இல்ல நான் இல்ல நான் யாரிடமும் காபி கேட்கல எனக்கூறி பயப்பட அனைவரும் சிரிக்கின்றனர் இப்படி பல்பு வாங்கிட்டோமே என அசிங்கப்படுகிறார் கோபி.

Leave a Comment