திருமணத்தை தடுக்கவந்த ராமமூர்த்தியை தள்ளிவிட்ட கோபி.! குற்ற உணர்ச்சியில் ராதிகா விறுவிறுப்பாகும் எபிசொட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது கோபி மற்றும் ராதிகா இருவருக்கும் திருமண நடக்க இருக்கும் நிலையில் அதற்கான வேலைப்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கோபி மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய திருமணம் நடக்குமா.? நடக்காதா? என்பதனை மையமாக வைத்து தான் கடந்த வாரங்களாக எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

பெற்றோர்கள் மூலம் திருமணம் செய்து வைக்கப்பட்டு பாக்கியாவுடன் குடும்பம் நடத்தி மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து வருகிறார் கோபி. இப்படிப்பட்ட நிலைகள் தன்னுடைய பழைய காதலியான ராதிகாவை காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலுக்கு சுற்றி வந்துள்ளார். பிறகு அவருடன் பழக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளார்.

அந்த வகையில் பாக்யாவிற்கும் இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்த நிலையில் விவாகரத்து கொடுத்து விட்டார். இதற்காக பல பித்தலாட்ட வேலைகளை செய்த கோபி ராதிகாவின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள நிலையில் தன்னுடைய அம்மா ஈஸ்வரியிடம் இதனை பற்றி கூறுகிறார் இதனால் கோபமடைந்த ஈஸ்வரி இந்த திருமணம் எப்படி நடக்கிறது என்பதை நான் பார்க்கிறேன் என்ன சவால் விட்டு விடுகிறார்.

இதனை தன்னுடைய கணவர் ராமமூர்த்தியிடம் கூற ராமமூர்த்தியும் கோபியை எச்சரிக்கிறார் இருந்தாலும் கோபி நான் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய நிலையில் நேரடியாக ராமமூர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார் அங்கு ராதிகா கோபியின் ரிசபஷன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அங்கு சென்று கோபியை பார்த்து காலம் போன காலத்தில் கல்யாணம் பண்ணிக்க போறியா என சட்டையை பிடித்து கேள்வி கேட்க கோபத்தில் ராமமூர்த்தி தள்ளி விடுகிறார் கோபி. இதனை அறிந்ததும் கோபி ராதிகாவின் திருமண மண்டபத்திற்கு சமையல் செய்வதற்கான வேலையை பார்க்க வந்த பாக்கியா மாமனாரை அழைத்து இந்த வேலை எனக்கு மிகவும் முக்கியம் எனக் கூறுகிறார் எனவே இந்த திருமணம் கோபியின் பிளான் படி வெற்றிகரமாக நடக்கிறது.

Leave a Comment

Exit mobile version