தன்னுடைய பெட்ரூமுக்கு வந்த கோபியை ஆழ் மனதில் இருந்து ரசிக்கும் பாக்யா.! கடைசியில் இப்படி ஆயிடுச்சே..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கலுக்கு ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கிய லட்சுமி.இந்த சீரியலில் பாக்கியா தற்பொழுது கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ள நிலையில் ராதிகா தன்னை ஏற்றுக்கொள்வார் என்ற எண்ணத்தில் ஹோட்டல் ஒன்று தங்கி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் பாக்கியா கோபி இருவரும் ரோட்டில் பேசிக் கொண்டிருப்பதை பாக்கியா பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்கிறார் அங்கு போனவுடன் பெட்ரூமில் கோபி படுத்திருப்பது போல் நினைக்கிறார். என்னதான் கோபியின் மீது கோபம் இருந்தாலும் அடி மனதில் பாக்யாவிற்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இவ்வாறு 50 வயதில் வீட்டை விட்டு வெளியேறி தற்பொழுது ராதிகா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக காத்து வருகிறார். மேலும் இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்பதற்காக பாக்கியா தன்னுடைய வளையலை அடகு வைத்துவிட்டு அதனை வைத்து ஃபீஸ் கட்டுவதற்காக ஸ்கூல் செல்கிறார்.

ஆனால் அதற்கு முன்பே கோபி இனியாவிற்கு தேவையான பணத்தை ஸ்கூலில் கட்டி உள்ளார் இதனால் பாக்கியா வீட்டிற்கு வர பிறகு கோபி போன் செய்து நீ எல்லாம் மற்றவர்களிடம் ஒட்டி வாழ தான் முடியும் என அசிங்கப்படுத்துகிறார் எனவே பாக்கியா இருக்கும் பணத்தை வைத்து தன்னுடைய தொழிலை டெவலப் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.

மேலும் இனியாவிற்காக கோபி பணம் கட்டியது தெரிந்து கொண்ட ஈஸ்வரி அவன் இந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும் அவள் இன்னும் பொறுப்பாக தான் இருக்கிறான் என பாக்யாவை குத்தி காட்டுகிறார். இந்நிலையில் ராதிகாவின் அண்ணன், அம்மா இருவரும் கோபியை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வருகிறார்கள் ஆனால் அதற்கு ராதிகா இப்பொழுது வேண்டாம் கொஞ்ச நாள் ஆகட்டும் என கூறியுள்ளார்.

Leave a Comment