உனக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று பார்க்கலாம் கோபியை பார்த்து சவால் விட்ட ஈஸ்வரி..! பரபரப்பாகும் எபிசோட்..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது ராதிகா கோபியின் இரண்டாவது திருமணத்தை பற்றிய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இந்த எபிசோடுகள் ஒட்டு மொத்தமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக திருமண வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சாப்பாடு, புது டிரஸ், பார்ட்டி ஹால் என அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.ராதிகா கோபியின் மீது இருந்த கோபத்தை மறந்து விட்டு மிகவும் நன்றாக நடந்து கொள்ளும் நிலையில் கோபி ராதிகா இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.

இருவரும் தங்களுடைய திருமண நாளுக்காக மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இனியாவுக்கும் டிரஸ் எடுக்க வேண்டும் என ராதிகா கூற ஷாக் ஆகிறார் கோபி ஏனென்றால் கண்டிப்பாக இனியாவிற்கு இந்த திருமணம் பிடிக்காது என கோபிக்கு தெரியும்.

ஆனால் அதே நேரத்தில் கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரியை நம்புகிறார் அவரிடம் திருமணம் பற்றி சொல்லி நேரில் கூப்பிட வேண்டும் என நினைக்கிறார் இதனை ராதிகாவிடமும் சொல்ல அதற்கு ராதிகா திருமணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என கோபியிடம் சொல்லுகிறார். இப்படிப்பட்ட நிலையில் கோபி கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய அம்மா ஈஸ்வரியை பார்க்கிறார்.

மேலும் ஈஸ்வரி கோபியை பார்த்தவுடன் கோபி என கத்தி கோபியிடம் வருகிறார் அங்கு தன்னுடைய இரண்டாவது திருமணத்தை பற்றி கூறும் பொழுது அதற்கு ஈஸ்வரி நீ சொல்வதை எல்லாம் நான் கேட்பேன் என நினைச்சியா இந்த திருமணம் எப்படி நடக்குது என்பதை பார்க்கலாம் என சவால் விடுகிறார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த கோபி கை கூப்பி கெஞ்சுகிறார் இதுதான் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment