கோபியின் முகத்தில் தன்னுடைய தாலியை கழட்டி ஏறிந்த பாக்யா.! ஆடிப்போன ராதிகா..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சுவாரஸ்யமான கதைகளத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா கடும் கோபமாக நடந்தது கொண்டு உள்ளார் இது குறித்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதாவது தற்பொழுது மிகவும் அதிரடியாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது திருமண மேடையில் கோபி ராதிகா மண மக்கள் கோலத்தில் உட்கார்ந்து இருக்கிறார்கள் இவர்களுடைய திருமணம் தெரிந்து கொண்ட ஈஸ்வரி, இனியாவுடன் மண்டபத்திற்கு வருகிறார் ஆனால் இவர்கள் வருவதற்கு முன்பே கோபி ராதிகாவின் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறார் இதனை பார்த்தவுடன் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் இனிமேல் நீ எனக்கு மகன் இல்லை என ஈஸ்வரி கூற டாடி என்னை ஏமாற்றி விட்டார் என இனியாவும் சொல்கிறார். மேலும் கோபம் தாங்க முடியாமல் ஈஸ்வரி கோபி ராதிகாவை கண்டபடி திட்டுகிறார் பிறகு சாபமும் இவர்களுக்கு விட இனிமேல் என் மருமகள் பாக்யாவிற்கும் என் பேர குழந்தைகளும் நான் இருக்கேன் என சொல்லி பாக்யாவிற்கு ஆதரவாக நிற்கிறார் மறுபுறம் ஈஸ்வரி பேசியதை கேட்டு ராதிகா கோவமாக இருக்க கோபி அவர்களை சமாதானப்படுத்துகிறார்.

இவ்வாறு கோபி ராதிகாவின் திருமணம் முடிந்த நிலையில் பாக்கியாவின் 25 வருட திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கிறது இதனால் இதற்கு மேல் எந்த அர்த்தமும் இல்லை என்பதற்காக பாக்யா தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியை கழட்டி கோபியிடம் கொடுக்கிறார் இவ்வாறு பாக்கியா இப்படி செய்வாரென எதிர்பார்க்காமல் இருந்து வந்த நிலையில் கோபி அதிர்ச்சி அடைகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இனி வரும் எபிசோடுகளில் தனி ஆளாக இருந்து எப்படி பாக்யா தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ளப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோபியின் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வந்து ராதிகாவை அசிங்கப்படுத்திய நிலையில் ராதிகா கொடூரவள்ளியாக மாற இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Leave a Comment